பட்டியலின மக்களுக்கான 3000 கோடியை மடைமாற்றிய திமுக

அண்ணாமலை `என் மண், என் மக்கள்’ என்னும் பெயரில் பாதயாத்திரைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில் நிலையம் அருகே பாதயாத்திரையைத் தொடங்கியவர், தேவர் சிலைபகுதி வரையிலும் கட்சித்தொண்டர்களுடன் பாதயாத்திரையாக வந்தார். கடம் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க மண்பாண்டங்களுக்கு மானாமதுரை புகழ்பெற்றது. இங்குள்ள மண்பாண்டத்தின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தார் அண்ணாமலை. உடனே, கட்சிநிர்வாகிகள் மண்பாண்டம் தயாரிக்கும் இடத்துக்கு அழைத்துச்சென்றனர். கடம் தயார் செய்யும் இடத்தைப் பார்வை யிட்டவர், மண்பாண்டம் தயாரிக்கும் சக்கரத்தை இயக்கினார்.

தொடர்ந்து, வரும்காலங்களில் இந்தத்தொழில் நலிவடையாமல் இருக்க தன்னால் முடிந்த முயற்சிகளை எடுப்பதாகக் கூறினார். அண்ணாமலை பேசும்போது, “மானாமதுரை கடம் உலக புகழ் பெற்றதாக விளங்குகிறது. தமிழர்கள் உலகின் மிகப் பழைமை யானவர்கள் என்பதை கீழடி நமக்கு உணர்த்தி யிருக்கிறது.

அங்கு கண்டெடுக்கப்பட்ட மண்பானைகள் மானா மதுரையில் செய்யப் பட்டவை என்று சொல்லப் படும் அளவுக்கு வரலாற்றுப் புகழ்வாய்ந்தது இந்த ஊர். ஆனால், இந்தஊர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. மத்திய அரசு பட்டியலின மக்களுக்காக ரூ.3,000 கோடியை தமிழகத்துக்கு ஒதுக்கியது. அந்தநிதியைத்தான் தற்போது தி.மு.க மகளிர் உரிமைத் தொகைக்காக எடுத்திருக்கின்றனர். யார்பெற்ற குழந்தைக்கு யார் பெயர் வைப்பது, இந்த நிதி மாற்றத்தை அரசாணையாக வெளியிட்டிருக்கின்றனர்.

பொருளாதரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா இன்று மோடி ஆட்சியில் 5-வது இடத்துக்கு முன்னேறி யிருக்கிறது. தமிழ் மொழியை, அதன் தொன்மையை உலகமெங்கும் எடுத்துக்கூறி தமிழுக்குப் பெருமை சேர்ப்பவர் மோடி. காரைக்குடி செட்டி நாடு பகுதியினருக்குச் சொந்தமாக மடம் போன்ற ஓர்இடம் இருந்தது. அந்த இடத்தை அப்போதைய ஆளும் அரசு அபகரித்தது. ஆனால், பா.ஜ.க அரசு தற்போது அதை மீட்டுக் கொடுத்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் சிவகங்கை மாவட்டத்துக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...