பட்டியலின மக்களுக்கான 3000 கோடியை மடைமாற்றிய திமுக

அண்ணாமலை `என் மண், என் மக்கள்’ என்னும் பெயரில் பாதயாத்திரைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில் நிலையம் அருகே பாதயாத்திரையைத் தொடங்கியவர், தேவர் சிலைபகுதி வரையிலும் கட்சித்தொண்டர்களுடன் பாதயாத்திரையாக வந்தார். கடம் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க மண்பாண்டங்களுக்கு மானாமதுரை புகழ்பெற்றது. இங்குள்ள மண்பாண்டத்தின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தார் அண்ணாமலை. உடனே, கட்சிநிர்வாகிகள் மண்பாண்டம் தயாரிக்கும் இடத்துக்கு அழைத்துச்சென்றனர். கடம் தயார் செய்யும் இடத்தைப் பார்வை யிட்டவர், மண்பாண்டம் தயாரிக்கும் சக்கரத்தை இயக்கினார்.

தொடர்ந்து, வரும்காலங்களில் இந்தத்தொழில் நலிவடையாமல் இருக்க தன்னால் முடிந்த முயற்சிகளை எடுப்பதாகக் கூறினார். அண்ணாமலை பேசும்போது, “மானாமதுரை கடம் உலக புகழ் பெற்றதாக விளங்குகிறது. தமிழர்கள் உலகின் மிகப் பழைமை யானவர்கள் என்பதை கீழடி நமக்கு உணர்த்தி யிருக்கிறது.

அங்கு கண்டெடுக்கப்பட்ட மண்பானைகள் மானா மதுரையில் செய்யப் பட்டவை என்று சொல்லப் படும் அளவுக்கு வரலாற்றுப் புகழ்வாய்ந்தது இந்த ஊர். ஆனால், இந்தஊர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. மத்திய அரசு பட்டியலின மக்களுக்காக ரூ.3,000 கோடியை தமிழகத்துக்கு ஒதுக்கியது. அந்தநிதியைத்தான் தற்போது தி.மு.க மகளிர் உரிமைத் தொகைக்காக எடுத்திருக்கின்றனர். யார்பெற்ற குழந்தைக்கு யார் பெயர் வைப்பது, இந்த நிதி மாற்றத்தை அரசாணையாக வெளியிட்டிருக்கின்றனர்.

பொருளாதரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா இன்று மோடி ஆட்சியில் 5-வது இடத்துக்கு முன்னேறி யிருக்கிறது. தமிழ் மொழியை, அதன் தொன்மையை உலகமெங்கும் எடுத்துக்கூறி தமிழுக்குப் பெருமை சேர்ப்பவர் மோடி. காரைக்குடி செட்டி நாடு பகுதியினருக்குச் சொந்தமாக மடம் போன்ற ஓர்இடம் இருந்தது. அந்த இடத்தை அப்போதைய ஆளும் அரசு அபகரித்தது. ஆனால், பா.ஜ.க அரசு தற்போது அதை மீட்டுக் கொடுத்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் சிவகங்கை மாவட்டத்துக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...