ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதிதான் பல்ட்டி

 ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதிதான் என்று சந்திரசேகர் ராவ் மகளும், டிஆர்எஸ். எம்.பியுமான கவிதா லோக் சபாவில் கூறியுள்ளார்.

நிஜாமாபாத் தொகுதி எம்.பியான கவிதா, அண்மையில் அளித்தபேட்டி ஒன்றில், ஜம்மு காஷ்மீரும், ஹைதராபாத்தும் இந்தியாவின் அங்கமாக சுதந்திரத்திற்கு முன்பு இருந்ததில்லை என்றும், அவை கட்டாயப்படுத்தி இந்தியாவுடன் இணைக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், பா.ஜ.க.,வைச் சேர்ந்த வக்கீல் கருணா சாகர் என்பவர் ஹைதராபாத்தில் உள்ள 7வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் கவிதாமீது வழக்குதொடர்ந்தார். அதில் அவர், காஷ்மீரில் சர்வதேச எல்லைகளை மாற்றி அமைக்கவேண்டும் என்றும் கவிதா கூறியுள்ளார்.

அவரது கருத்து, தேச துரோகம் ஆகும். தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும். ஆகவே, அவர் மீது கிரிமினல்வழக்கு பதிவுசெய்யுமாறு போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்தமனு, நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்தபுகாரை மத்தனாபேட்டை போலீசுக்கு அனுப்ப உத்தரவிட்ட மாஜிஸ்திரேட்டு, புகாரைவிசாரித்து, வழக்கு பதிவுசெய்யுமாறும், விசாரணை நிலவர அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் கூறினார்.

இதைப்பற்றி கேட்டபோது, மத்தனாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.பி.வி.ராஜு, நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்தபிறகு, வழக்கு பதிவு செய்யப்படும் என்று கூறினார். அதன்படி, தேசநலனுக்கு எதிராக கருத்து கூறியதாக, நேற்று மாலை கவிதா மீது, 123ஏ, 153பி, 505 ஆகிய பிரிவுகளின் கீழ், ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அவர் மீது முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் இந்தக் கருத்துக்காக பகிரங்க மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. இதனிடையே லோக்சபாவில் நேற்று பேசிய கவிதா, ஜம்முகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...