விஜய்சங்கல்ப் யாத்திரையை தொடங்கி வைத்த அமித் ஷா

 அரியானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக. தீவிரமுயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

பா.ஜ.க.வின் புதிய தேசியத்தலைவராக அமித்ஷா தேர்ந்து எடுக்கப்பட்டார். அவர் அரியானா தேர்தலில் தனிகவனம் செலுத்தி வருகிறார் .

உத்தரபிரேசததில் வெற்றியை குவித்ததுபோல அரியானாவிலும் வெற்றிபெற அவர் புதிய வியூகங்கள் வகுத்துள்ளார். அதன்படி அரியானாவில் அவர் ”விஜய்சங்கல்ப் யாத்திரை” நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

11 நாட்கள் நடக்கும் இந்த பிரசாரயாத்திரையை வியாழக்கிழமை அமித்ஷா தொடங்கி வைத்தார் . இதன் மூலம் அரியானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை பா.ஜ.க. தொடங்கி விட்டது.

அரியானாவில் உள்ள மகேந்திர கர்க் என்ற இடத்தில் தனது பிரச்சாரத்தை துவக்கிய அமித் ஷா அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபிந்தர் சிங் ஹுடா முதல்வராக பதவி வகித்து வரும் இம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. இம்மாநிலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நில பேர ஊழல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. டெல்லியில் உள்ள காங்கிரஸ் பேர்வழிகள், விவசாய நிலங்களை எல்லாம் அபகரித்து விற்பவராக ஹுடாவை மாற்றி விட்டனர்.

இவ்வாறு பேசிய அமித் ஷா, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்

விஜய் சங்கல்ப் யாத்திரைக்கு அரியானா மாநில பா.ஜ.க. தலைவர் ராம்விலாஸ் சர்மா தலைமை ஏற்று நடத்துகிறார். இந்த யாத்திரை நிவாரி, குர்கான், மேவட், பரிதாபாத், பல்வால் உள்பட பலமுக்கிய நகரங்கள் வழியாக நடைபெற உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள� ...

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி பெருமிதம் நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக ...

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனி� ...

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி – நயினார் நாகேந்திரன் ''ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பொதுமனிதர். நாட்டில் நல்லது நடக்க ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை திறந்தார் மோடி; சிறப்புகள் ஏராளம்! உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவட� ...

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க ...

டில்லி இல்லத்தில் ‘சிந்தூர்R ...

டில்லி இல்லத்தில் ‘சிந்தூர்’ மரக்கன்றை நட்டார் பிரதமர் மோடி; இணையத்தில் வீடியோ வைரல் டில்லியில் தனது இல்லத்தில் பிரதமர் மோடி 'சிந்தூர்' மரக்கன்றை ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...