விஜய்சங்கல்ப் யாத்திரையை தொடங்கி வைத்த அமித் ஷா

 அரியானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக. தீவிரமுயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

பா.ஜ.க.வின் புதிய தேசியத்தலைவராக அமித்ஷா தேர்ந்து எடுக்கப்பட்டார். அவர் அரியானா தேர்தலில் தனிகவனம் செலுத்தி வருகிறார் .

உத்தரபிரேசததில் வெற்றியை குவித்ததுபோல அரியானாவிலும் வெற்றிபெற அவர் புதிய வியூகங்கள் வகுத்துள்ளார். அதன்படி அரியானாவில் அவர் ”விஜய்சங்கல்ப் யாத்திரை” நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

11 நாட்கள் நடக்கும் இந்த பிரசாரயாத்திரையை வியாழக்கிழமை அமித்ஷா தொடங்கி வைத்தார் . இதன் மூலம் அரியானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை பா.ஜ.க. தொடங்கி விட்டது.

அரியானாவில் உள்ள மகேந்திர கர்க் என்ற இடத்தில் தனது பிரச்சாரத்தை துவக்கிய அமித் ஷா அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபிந்தர் சிங் ஹுடா முதல்வராக பதவி வகித்து வரும் இம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. இம்மாநிலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நில பேர ஊழல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. டெல்லியில் உள்ள காங்கிரஸ் பேர்வழிகள், விவசாய நிலங்களை எல்லாம் அபகரித்து விற்பவராக ஹுடாவை மாற்றி விட்டனர்.

இவ்வாறு பேசிய அமித் ஷா, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்

விஜய் சங்கல்ப் யாத்திரைக்கு அரியானா மாநில பா.ஜ.க. தலைவர் ராம்விலாஸ் சர்மா தலைமை ஏற்று நடத்துகிறார். இந்த யாத்திரை நிவாரி, குர்கான், மேவட், பரிதாபாத், பல்வால் உள்பட பலமுக்கிய நகரங்கள் வழியாக நடைபெற உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...