ஹுட் ஹுட் புயல் மீட்ப்பு பணி தீவிரம்

 வங்க கடலில் உருவான ஹுட் ஹுட் புயல் ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், ஒடிஸாவின் கோபால்பூர் இடையே ஞாயிற்றுக் கிழமை மதியம் கரையைக்கடந்தது. இதில், இரு மாநிலங்களிலும் சேர்த்து 6 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திரத்தில் விசாகப் பட்டினத்திலும், ஸ்ரீகாகுளத்திலும் மரம்விழுந்து 2 பேரும், மதில் சுவர் இடிந்து விழுந்து ஒருவருமாக 3 பேர் உயிரிழந்தனர்.

ஒடிஸா மாநிலத்தில், புரிமாவட்டத்தில் மீனவர் ஒருவரும், கேந்திர பாராவில் சனிக் கிழமை படகு கவிழ்ந்ததில் நீரில்மூழ்கி ஒரு சிறுவனும், சத்பயா பகுதியில் பவுன் சகாடி ஆற்றில் மற்றொரு படகு கவிழ்ந்ததில் நீரில்மூழ்கி ஒரு சிறுமியுமாக 3 பேர் உயிரிழந்தனர். இரு மாநிலங்களிலும் நேரம் செல்லச்செல்ல புயலின்வேகம் படிப்படியாகக் குறைந்துவருகிறது.

ஆந்திர கடலோர மாவட்டங்களான விசாகப்பட்டினம், ஸ்ரீகா குளம், விஜய நகரம் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் காரணமாக மின் விநியோகம் தடைப்பட்டது. மரங்கள் வேருடன்சாய்ந்தன. அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை.

பலத்தகாற்றால் கடல் அலை 1.5 மீட்டர் முதல் 2 மீட்டர் உயரம்வரை எழுந்தது. புயல் அச்சுறுத்தல் உள்ளதாக 5 மாவட்டங்களிலும் உள்ள 356 கிராமங்கள் கணிக்கப்பட்டு அந்தக்கிராம மக்களுக்காக 300 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. முன்னதாக, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம், ஸ்ரீகா குளம், விஜய நகரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 90,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.

ஒடிஸாவில் புயல்காரணமாக முன்னெச்சரிக்கையாக சுமார் 1.56 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு 1,690 மையங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

மாநிலத்தின் தென்மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப்ணியில் ராணுவம்: ஆந்திரத்தில் மக்களை மீட்க விசாகப் பட்டினத்தில் 6 ஹெலிகாப்டர்கள், ராணுவ வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர் . அதுபோல, ஒடிஸாவிற்கு 5 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

மீட்பு பணியில் தேசியபேரிடர் மீட்பு படையை சேர்ந்த 44 குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த குழுக்களில் மொத்தம் 2,000 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். மீட்புப்பணியில் 220 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...