புயல் பாதிப்பை பார்வையிட வந்த மத்தியக்குழு முதற்கட்டமாக 945 கோடி நிவாரணம்

புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக, நேற்று தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க, 2,000 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

இதை தொடர்ந்து, முதல்வரிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, வெள்ள பாதிப்பு விபரங்களை கேட்டறிந்தார். இந்நிலையில், தமிழக புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய, மத்திய உள்துறை அமைச்சகத்தால் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

மத்திய உள்துறை இணை செயலர் ராஜேஷ்குப்தா தலைமையில், மத்திய வேளாண் துறை எண்ணெய் வித்துக்கள் மேம்பாட்டு பிரிவு இயக்குனர் பொன்னுசாமி, நிதித்துறையின் செலவினங்கள் பிரிவு இயக்குனர் சோனாமணி ஹோபம், மத்திய நீர்வள ஆணைய, சென்னை மண்டல இயக்குனர் சரவணன்.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக சென்னை மண்டல செயற்பொறியாளர் தனபாலன் குமரன், மத்திய மின்சார துறை உதவி இயக்குனர் ராகுல் பச்கேட்டி, மத்திய ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் பாலாஜி உள்ளிட்ட, ஏழு பேர் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை வந்துள்ள இக்குழுவினர், நேற்று மாலை முதல்வருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத பாதிப்பு குறித்த அறிக்கையை, குழுவிடம் முதல்வர் வழங்கினார். அதில் நிரந்தர ம்றறும் தற்காலிக மறு சீரமைப்பு பணிகளுக்காக 6,675 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, இன்று முதல் மூன்று குழுவாக பிரிந்து சென்று, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர். தமிழகத்தில் ஆய்வை முடித்து, புதுச்சேரி மாநிலத்திலும் சில பகுதிகளில் ஆய்வு செய்யவுள்ளனர்.

இதற்கிடையே, தமிழகத்திற்கு முதற்கட்ட நிவாரணமாக, 944.8 கோடி ரூபாயை வழங்க, மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்து உள்ளது. மத்திய குழு ஆய்வுக்கு பின், கூடுதல் நிவாரண நிதி வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...