கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த பித்தம், பிரமேகம், மதரோகம் போன்ற நோய்கள் குணமாகும்.
இந்தப் பழம் உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தைப் பெற்றுத் திகழலாம். நன்கு பழுத்த இனிப்பு நிறைந்த கொடிமுந்திரிப் பழம்தான் நல்ல ஜீரண சக்தியை உண்டு பண்ணும். மலச் சிக்கலைப் போக்கும். தாகத்தைத் தணிக்கும். இரத்தத்தைச் சிறக்கச் செய்யும்.'
குழந்தைகளுக்கு இந்தப் பழத்தின் சாற்றைக் கொடுத்து வர வேண்டும். பல் முளைக்கும்போது இந்தப் பழத்தின் சாரைக் கொடுத்துவந்தால் மலச்சிக்கலைப் போக்கும்.
இருதயப் பலவீனத்தைப் போக்குவதற்குப் பெரிதும் உதவும் இந்தப் பழம் தீராத தலைவலியையும் காக்காய் வலிப்பு நோயையும் குணப்படுத்தும் ஆற்றலுள்ளதாகும்.
புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் பெற்ற தாகவும் இது திகழ்கிறது. காசநோய், மற்றும் தொண்டை சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்துகிறது. உடற்பருமனைக் குறைக்கவும் உற்ற பழமாக இது விளங்குகிறது.
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.