சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 நாட்கள் கொள்ள ஆரம்பப் பாரிச வாதம், வாயு, குடைசல், பக்கவாதம் குணமாகும்.
சங்கிலை, வேம்பு, குப்பைமேனி, நொச்சி, நாயுருவி ஆகியவற்றில் வேதுபிடிக்க வாத வீக்கம், வலி, நீர்ஏற்றம், கீல்வாயு ஆகியவை குணமாகும்.
சங்கம் வேர்ப்பட்டைச்சாறு 20 மி.லி அளவு எடுத்து 100 மி.லி வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடித்து வர சிறுநீர்த்தடை நீங்கிக் குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.