ஊழல் விஷயத்தில் எப்படி கூட்டணி நெருக்கடியை காரணம் காட்ட முடியும்; அத்வானி

கூட்டணி தர்மத்துக்காக ஒரு சில விஷயத்தில் சமரசம் செய்து கொண்டதாக பிரதமர் தெரிவித்திருப்பது அரசினுடைய தவறுகளை மறைப்பதற்கான சாக்கு போக்கே என பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக தனது இணைய தளத்தில் தெரிவித்திருப்பதாவது: 

அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்களுக்கு அளித்த சிறப்பு பேட்டி மிகவும் ஏமாற்றமாக அமைந்திருந்தது. கூட்டணி ஆட்சிக்காக சில விஷயங்களில் சமரசம் செய்து கொண்டதாக அவர் கூறியிருப்பது வெறும் சாக்குப் போக்குதான். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒரு போதும் எந்த விஷயத்திலும் சமரசம் செய்து கொண்டதில்லை. நேர்மையான சிறந்த நிர்வாகத்தை முக்கியமாக கருதி செயல்பட்டோம்.

ஊழலைத் தடுக்கமுடியவில்லை. இந்த விஷயத்தில் அரசின் இயலாமையை மறைக்கவே கூட்டணி கட்சிகளின் நெருக்கடி என்று சாக்குப்போக்கு சொல்கிறார் பிரதமர்.

கூட்டணி ஆட்சியில் நிர்வாகத்திலும் கொள்கைகளை அமல்படுத்துவதிலும் உள்ள சிக்கல்களை நாங்களும் நன்கு அறிவோம்.

ஆட்சியில் நடைபெறும் தவறுகளுக்கு கூட்டணி கட்சிகள் கொடுக்கும் நெருக்கடியை ஒரு காரணமாக கூறக் கூடாது. கூட்டணி தர்மத்துக்காக சமரசம் செய்து கொண்டோம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, எங்கள் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி தெலங்கானா தனி மாநிலம் அமைப்பதை ஏற்கவில்லை. கூட்டணி கட்சி ஒப்புக்கொண்டிருந்தால் தெலங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுத்திருப்போம். கூட்டணி நெருக்கடியால் அதை எங்களால் செய்ய முடியவில்லை. கூட்டணி நெருக்கடி இந்த அளவில் இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஊழல் விஷயத்தில் எப்படி கூட்டணி நெருக்கடியை காரணம் காட்ட முடியும். ஊழலற்ற நிர்வாகத்தை நடத்துவதில் எப்படி சமரசம் செய்து கொள்ள முடியும்?

ஊழலுக்கு எதிராக பாஜக தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபடும். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர பாஜக தொடர்ந்து பாடுபடும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வெளிநாடுகளில் உள்ள சொத்துகள் பற்றிய விவரங்களை குறிப்பிட வேண்டும். அதற்கேற்ற வகையில் தேர்தல் சட்ட விதிகள் திருத்தப்பட வேண்டும்.

சுதந்திரத்துக்குப் பின் முதல் 30 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி ஊழலுக்குவித்திட்டது. அதனால் தான் ஜெயப்பிரகாஷ் நாராயணன் காங்கிரஸ் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டினார். அதுவே ஒரு கட்சி அரசியலிருந்து பல்வேறு கட்சிகளை கொண்ட அரசியலுக்கு வித்திட்டது என்றார் அத்வானி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...