ஊழல் விஷயத்தில் எப்படி கூட்டணி நெருக்கடியை காரணம் காட்ட முடியும்; அத்வானி

கூட்டணி தர்மத்துக்காக ஒரு சில விஷயத்தில் சமரசம் செய்து கொண்டதாக பிரதமர் தெரிவித்திருப்பது அரசினுடைய தவறுகளை மறைப்பதற்கான சாக்கு போக்கே என பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக தனது இணைய தளத்தில் தெரிவித்திருப்பதாவது: 

அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்களுக்கு அளித்த சிறப்பு பேட்டி மிகவும் ஏமாற்றமாக அமைந்திருந்தது. கூட்டணி ஆட்சிக்காக சில விஷயங்களில் சமரசம் செய்து கொண்டதாக அவர் கூறியிருப்பது வெறும் சாக்குப் போக்குதான். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒரு போதும் எந்த விஷயத்திலும் சமரசம் செய்து கொண்டதில்லை. நேர்மையான சிறந்த நிர்வாகத்தை முக்கியமாக கருதி செயல்பட்டோம்.

ஊழலைத் தடுக்கமுடியவில்லை. இந்த விஷயத்தில் அரசின் இயலாமையை மறைக்கவே கூட்டணி கட்சிகளின் நெருக்கடி என்று சாக்குப்போக்கு சொல்கிறார் பிரதமர்.

கூட்டணி ஆட்சியில் நிர்வாகத்திலும் கொள்கைகளை அமல்படுத்துவதிலும் உள்ள சிக்கல்களை நாங்களும் நன்கு அறிவோம்.

ஆட்சியில் நடைபெறும் தவறுகளுக்கு கூட்டணி கட்சிகள் கொடுக்கும் நெருக்கடியை ஒரு காரணமாக கூறக் கூடாது. கூட்டணி தர்மத்துக்காக சமரசம் செய்து கொண்டோம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, எங்கள் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி தெலங்கானா தனி மாநிலம் அமைப்பதை ஏற்கவில்லை. கூட்டணி கட்சி ஒப்புக்கொண்டிருந்தால் தெலங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுத்திருப்போம். கூட்டணி நெருக்கடியால் அதை எங்களால் செய்ய முடியவில்லை. கூட்டணி நெருக்கடி இந்த அளவில் இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஊழல் விஷயத்தில் எப்படி கூட்டணி நெருக்கடியை காரணம் காட்ட முடியும். ஊழலற்ற நிர்வாகத்தை நடத்துவதில் எப்படி சமரசம் செய்து கொள்ள முடியும்?

ஊழலுக்கு எதிராக பாஜக தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபடும். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர பாஜக தொடர்ந்து பாடுபடும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வெளிநாடுகளில் உள்ள சொத்துகள் பற்றிய விவரங்களை குறிப்பிட வேண்டும். அதற்கேற்ற வகையில் தேர்தல் சட்ட விதிகள் திருத்தப்பட வேண்டும்.

சுதந்திரத்துக்குப் பின் முதல் 30 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி ஊழலுக்குவித்திட்டது. அதனால் தான் ஜெயப்பிரகாஷ் நாராயணன் காங்கிரஸ் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டினார். அதுவே ஒரு கட்சி அரசியலிருந்து பல்வேறு கட்சிகளை கொண்ட அரசியலுக்கு வித்திட்டது என்றார் அத்வானி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...