அரச இலையின் மருத்துவக் குணம்

 அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் தாது விருத்தி செய்யும், சுரத்தையும், முத்தோட கோபத்தையும் போக்கும்.

 

இதன் இலையை பழுப்பாக எடுத்து நன்றாக எரித்துக் கரியாக்கித் தேங்காய் எண்ணெயில் குழைத்து தீப்பட்ட புண்களில் மயிலிறகால் தடவி வர இரணம் விரைவில் ஆறிப் போகும். இதன் இலையை, கொழுந்துடன் அரைத்து பாலில் அவித்து சர்க்கரைச் சேர்த்து உண்ண, சுரம், வாத, பித்த, சிலேத்துமரோகங்கள் போகும். சுக்கிலம் விருத்தியாகும்.

பட்டையை இடித்துப் பொடி செய்து துணியில் சலித்து, தேன் சேர்த்துக் கொடுக்க தீராத விக்கல் தீரும்.

பட்டைத் தூளில் 15 கிராம் அல்லது 30 கிராம் எடுத்து குடிநீர் செய்து கொடுக்க சொறி சிரங்குகள் குணமாகும். உடல் வெப்பம் குறையும். தூளைப் புண்களின்மேல் தூவ புண்கள் ஆறும்.

நன்னாரிப் பட்டை, அத்தி, அரசு, ஆல், இத்தி, நாவல் மரப்பட்டைகளை, சமனாக எடுத்து இடித்துக் குடிநீர் செய்து முறைப்படி 1 லிட்டர் நீர், நல்லஎண்ணெய் 1 லிட்டர், அதிமதுரம், சின்ன இலவங்கப் பட்டை, வெட்டி வேர், கோட்டம், சந்தனம் வகைக்கு 10 கிராம் எடுத்து பசும்பாலில் விட்டரைத்து மேற்படி குடிநீரில் சேர்த்து கலக்கித் தீயில் எரித்துப் பக்குவமாகத் தைலம் செய்து, சொறி, சிரங்குகள், கரப்பான் நோய்களுக்குத் தடவ விரைவில் குணமாகும்.

இம்மரத்தை ஆணியால் குத்தினால் பால் வரும். அதை எடுத்துக் காலில் உள்ள பித்த வெடிப்புக்குத் தடவ வெடிப்புகள் நீங்கிக் குணமாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...