பிரதமர் நரேந்திரமோடி இலங்கை சென்றார்

 இந்திய பெருங் கடல் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி இலங்கை சென்றார்.

பிரதமர் நரேந்திர மோடி, செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை உள்ளிட்ட இந்திய பெருங் கடல் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன், தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய் சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சென்றுள்ளனர். மொரீஷியஸில் தனது பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி இலங்கை சென்று உள்ளார்.

மூன்று நாடுகள் பயணத்தின் இறுதியாக, இன்று பிரதமர் மோடி இலங்கை சென்றார். காலை 5.25 மணிக்கு கொழும்பு விமானநிலையம் சென்ற பிரதமர் மோடியை, இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே வரவேற்றார். கடந்த 1987–ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைக்கு சென்ற பிறகு, அங்கு இந்தியபிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறை ஆகும். இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் இந்திய–இலங்கை உறவுகுறித்த முக்கியமான பேச்சு வார்த்தையில் மோடி கலந்து கொள்கிறார்.

மதியம் இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே அளிக்கும் மதியவிருந்தில் கலந்து கொள்கிறார். அதன் பிறகு இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து உரையாடுகிறார். பிரசித்திபெற்ற புத்தஸ்தலமான மகா போதி சொசைட்டி மற்றும் இந்திய அமைதிப்படை நினைவு மண்டபத்தில் இலங்கையில் அமைதி பணியில் கலந்துகொண்டு உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். ஸ்ரீலங்கா சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் இலங்கையின் வணிகர்கள் மற்றும் நிறுவனங்களின் அதிபர்கள் ஏற்பாடுசெய்யும் விருந்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.