தீவிரவாத தாக்குதல் பாகிஸ்தானை கண்டித்து சட்ட சபையில் தீர்மானம்

 காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் களுக்காக பாகிஸ்தானை கண்டித்து சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காஷ்மீரில் 48 மணி நேரத்துக்குள் கதுவா ,சம்பா மாவட்டங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புபடை வீரர்கள் உள்பட 7 பேர் கொல்லப் பட்டதுடன், பலரும் படுகாய மடைந்தனர்.

இதுகுறித்து கருத்துதெரிவித்த முதல்–மந்திரி முப்தி முகமது சயீத், 'இந்த தாக்குதலுக்கு காஷ்மீரை சாராதவர்களே காரணம்' என கூறினார். ஆனால் துணை முதல்மந்திரியும், பா.ஜ.க சேர்ந்தவருமான நிர்மல்சிங் கூறுகையில், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானும், ஐஎஸ்ஐ. நிறுவனமுமே பொறுப்பு என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரம் நேற்று மாநில சட்டசபையில் எதிரொலித்தது. தீவிரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.,வை சேர்ந்த உறுப்பினர்களும் கடும்கண்டனம் தெரிவித்தனர். மேலும் பாகிஸ்தானுக்கு தகுந்தபதிலடி கொடுக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.

அப்போது பேசிய முதல்மந்திரி முப்தி முகமது சயீத், தீவிரவாத தாக்குதல்களுக்கு கடும்கண்டனம் தெரிவித்தார். இந்தியாவுடன் அமைதியையும், நட்புறவையும் பாகிஸ்தான் விரும்பினால், தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

காஷ்மீரில் அமைதி திரும்பும் என நம்பிக்கை தெரிவித்தவர், இந்த தாக்குதலை கண்டிப்பது தொடர்பாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றுவதே எனது ஆலோசனை என்று கூறினார்.

உடனே, பாகிஸ்தான் ஆதரவு தாக்குதல்களுக்கு எதிராக சபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தானை கண்டித்தும், தீவிரவாத தாக்குதல் விவகாரத்தை பாகிஸ்தானிடம் எடுத்துச் செல்லுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...