தாக்குதல் நடத்தியது ஏன்: ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளிடம் இந்தியா விளக்கம்

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பினர்களிடம் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பல நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை தொடர்பு கொண்டு விளக்கமளித்தார்.

இந்நிலையில், ஐ.நா., பாதுகாப்பு சபையில் இடம்பெற்றுள்ள 13 உறுப்பு நாடுகளின் உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளை மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது விக்ரம் மிஸ்ரா கூறியதாக வெளியான தகவல்: ஏப்.,22ல் நடந்த பயங்கரவாத தாக்குதல், இந்தியாவை ஆத்திரமூட்டும் செயல்.பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடைய டிஆர்எப் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது. ஆனால், பிறகு பின்வாங்கியது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஐ.நா., சபையில் தீர்மானத்தை கொண்டு வர பாகிஸ்தான் கடுமையாக முயற்சித்தது. இதன் பின்னணியில் ஏதோ ஒரு சதி உள்ளது.பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த தாக்குதல் குறிப்பிட்ட இலக்குகளை குறிவைத்து, கட்டுப்பாட்டுடன் நடத்தப்பட்டது. பயங்கரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்கப்பட்டது.

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், இந்தியாவும் தாக்குதல் நடத்தும். காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே , ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், கத்தார், பிரான்ஸ், ஜெர்மனி நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களை தொடர்பு கொண்ட நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர் ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...