தினமும் 5 பேர் வரை எங்களை கற்பழிப்பார்கள்

 ஈராக்கில் பெரும் பகுதியை கைப்பற்றி வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் யாஷிதி பெண்களை கடத்தி சென்று செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்தி வருகிறார்கள்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிர்வாதிகள் பிடியில் இருந்து நூற்றுகணக்கான பெண்கள் தப்பியோடி வருகின்றனர் அவர்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர் . அதில், புஷ்ரா என்ற பெண் கூறியதாவது:-

கடந்த ஆண்டு எங்கள் கிராமத்துக்கு பக்கத்தில் உள்ள பகுதிகளை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றினார்கள். எங்கள் கிராமம் அதன் நடுப்பகுதியில் இருந்தது. நாங்கள் எங்கும் தப்பி செல்ல முடியாதபடி அந்த பகுதி முழுவதையும் முற்றுகையிட்டு இருந்தனர். ஒருநாள் இரவு எங்கள் ஊரை கைப்பற்றினார்கள்.

அந்த ஊரில் இருந்த பெண்கள் அனைவரையும் தனியாக அழைத்து சென்றனர். அதே போல் ஆண்களையும் தனியாக அழைத்து சென்றனர். எங்களை அங்குள்ள பள்ளிக்கூடத்தில் கொண்டுசென்று அடைத்தனர்.

ஆண்களை வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்று பெரும்பாலானவர்களை சுட்டுகொன்றனர். இரவு முழுவதும் துப்பாக்கி சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

மறுநாள் காலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பலர் நாங்கள் இருந்த பள்ளிக் கூடத்துக்கு வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அங்கிருந்த பெண்களை தங்களுக்கு தேர்வுசெய்து கொண்டார்கள். அழகான பெண்கள் மற்றும் இளம் பெண்களை தங்களோடு அழைத்துசென்றனர்.

அதே போல என்னையும் அழைத்து சென்றனர். அங்குவைத்து எங்களை கற்பழித்தனர். தினமும் 5 பேர் வரை எங்களை கற்பழிப்பது வழக்கமாக இருந்தது. ஒருநாளைக்கு ஐந்து முறை பாலியல் வல்லுறவுக்கு ஆளானோம் .ஒவ்வொரு இடமாக அழைத்து சென்று கொடுமை செய்தார்கள். ஒவ்வொரு நாளும் மாறிமாறி வேறுவேறு ஆட்கள் எங்களை அழைத்து செல்வார்கள். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் 60 வயதில் இருந்து 70 வயதுவரை உள்ள முதியோர்களும் இருக்கிறார்கள். அவர்கள்தான் மிகவும் கொடுமையாக நடந்து கொண்டார்கள். வயது அதிகமான அவர்கள் சிறுமிகளை தேர்வுசெய்து கற்பழித்தனர். ஒரு நாள் இரவு அவர்கள் பிடியில் இருந்து நாங்கள் தப்பித்து விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

நூருல் என்ற பெண் கூறியதாவது:-

தீவிரவாதிகளின் கொடுமை தாங்காமல் என்னோடு இருந்த பலபெண்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

என்னோடு பிறந்த 6 சகோதரர்களையும் தீவிரவாதிகள் அழைத்து சென்று விட்டனர். அவர்களில் ஒருவர் மட்டும் உயிரோடு இருப்பதாக தகவல் கிடைத்தது. மற்ற 5 பேரின்கதி என்ன என்று தெரியவில்லை. அவர்களை சுட்டுகொன்று இருப்பார்கள் என்று கருதுகிறேன். எங்கள் ஊரை சேர்ந்த பெரும்பாலான ஆண்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு கொன்று விட்டனர். எங்கள் கிராமமே முற்றிலும் அழித்துவிட்டது.இவ்வாறு அவர் கூறினார்.ஐ எஸ் படைகளிடம் சிக்கி, பத்து வாரங்களுக்குப் பின்னர் புஷ்ராவுக்கு தப்பிக்க வாய்ப்புகிடைத்தது.

அறுபது வயது ஐஎஸ் தலைவர் ஒருவர் முனீரா என்ற பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய போது அவருக்கு பதினைந்தே வயதுதான் ஆகியிருந்தது.

"நீ கன்னியாக இருந்ததால் உன்னோடு உறவு கொண்டேன். இப்போது நீ எனக்கு சலித்துவிட்டாய். எனக்கு வேறு கன்னிப்பெண் வேண்டும் என்று சொல்லி வேறொரு ஆளுக்கு விற்று விட்டார். அவரும் கொஞ்ச நாள் அனுபவித்துவிட்டு, இன்னொரு ஆளுக்கு என்னை விற்றார்" என்கிறார் முனீரா.

சுமார் ஐயாயிரம் யாஷிடி பெண்கள் ஈராக்கிலும் சிரியாவிலும் இன்னமும் ஐஎஸ் தீவிர்வாதிகளால் பாலியல் அடிமைகளாகப் பிடித்துவைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.