கருத்துக் கணிப்பு என்ற பெயரில் மக்களின் மனநிலையை மாற்ற முயற்சி

 தேர்தல் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் மக்கள் மன நிலையை மாற்ற முயற்சி செய்துள்ளார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்ட சபை தேர்தலுக்கு முன்னோட்டமாக லயோலா கல்லூரி கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 80 சட்டசபை தொகுதிகளில் கடந்த 13-ந் தேதி முதல் 26-ந்தேதி வரை 3,320 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

அந்தக் கருத்துக் கணிப்பின் முடிவின்படி தமிழகத்தில் சட்ட சபை தேர்தலில் மீண்டும் அதிமுக வெல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அதில், பாஜகவும், பாமகவும் 3 சதவீத மக்கள் ஆதரவை பெற்று சமபலத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கருத்துக் கணிப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தற்போது வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்பு குறுகிய வட்டத்துக்குள் சிலரிடம் கருத்து கேட்கப் பட்டுள்ளது. இதன் முடிவை நம்ப முடியாது. சிலரது இமேஜை உயர்த்த திட்டமிட்டு வெளியிட்ட கருத்துக் கணிப்பாகவே தோன்றுகிறது.

மக்கள் ஆராய்ந்து முடிவுசெய்ய இன்னும் காலம் இருக்கிறது. ஆனால் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் மக்களின் மனநிலையை மாற்ற முயற்சி செய்துள்ளார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...