பசுக்கள் கொல்லப் படுவதை தடுக்க உத்தர பிரதேசத்தில் உள்ளது போல நாடுமுழுவதும் பசு வதை தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு யோகாகுரு பாபா ராம்தேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, " உத்தர பிரதேச மாநிலம், தாத்ரிபகுதியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி முஸ்லீம் நபர் ஒருவர் அந்த கிராமவாசிகள் சிலரால் அடித்து கொல்லபட்ட விவகாரத்தில் அரசியல் இருப்பதாக கருதுகிறேன். பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் இந்தியாவில் பசுக்கள் கொல்லப் பட்டதற்கான சான்றுகள் இல்லை.
அந்தவகையில், பசுக்கள் கொல்லப்படுவதை முற்றிலுமாக தடைசெய்து, முன்னோடி மாநிலமாக உத்தரப்பிரதேசம் விளங்கி வருகிறது. உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவால் மாநிலத்தில் பசுவதை தடைச் சட்டத்தை கொண்டுவர முடியும் என்றால் நாடுமுழுவதும் இதனை பிரதமர் மோடியால் நடைமுறை படுத்தமுடியும். பசுவதை தடைச் சட்டத்தை பிரதமர் மோடி நாடுமுழுவதும் அறிவிக்க வேண்டும். நாடு முழுவதிலும் பசுக்களை கொல்ல தடை விதிக்கப்பட்டால், மத ரீதியிலான பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம்" என்றார்.
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
Leave a Reply
You must be logged in to post a comment.