சர்ச்சை கருத்துக்கள் நமக்கு பெரும் சுமையாகிறது

ஆத்திரமூட்டும் பேச்சுகளை தவிர்க்கும் படி கட்சி எம்பி.,க்களுக்கு பாஜக தலைவரும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருமான வெங்கய்ய நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கட்சியின் தலைவர்களும் சில அமைச்சர்களும் ஏதாவது சர்ச்சை கருத்துகளை பேசுவதால் அதை கையில்எடுத்து அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி பேசுகின்றன. மேலும் சகிப் பின்மை இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பிவருகின்றன. இதற்கு விளக்கம் அளித்துப் பேசுவது பெரிய சுமையாகிறது .

பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்காக எடுத்துவரும் நல்ல திட்டங்களின் முக்கியத்துவத்தை குலைக்கும் வகையில் பாஜக.,வினர் பேசும் சர்ச்சை பேச்சுகளை பெரிதாக்கி பாஜக எதிர்ப்பு சக்திகள் ஊதிவிடுகின்றன. இதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று எம்பிக்களுக்கு அவர் வேண்டு கோள் விடுத்தார்.

இந்த கூட்டம் முடிந்த பிறகு நாடாளுமன்ற விவகார இணைஅமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் கூறியதாவது:

பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல் தோல்வி உட்பட பல்வேறு விவகாரங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. கட்சிகொள்கைகளை மக்கள் மத்தியில் விரிவாக பரப்ப நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தப்பட்டது.

நாட்டின் முன்னேற்றம் நல்லவழியில் செல்வதாக குறிப்பிட்ட நிதியமைச்சர் அருண் ஜேட்லி, அதற்கு அடையாளமாக கடந்த காலாண்டில் வளர்ச்சிவிகிதம் 7.4 சதவீதத்தை தொட்டதை சுட்டி காட்டினார். கண்ணியத்தை கடைபிடித்து பாஜக பேசுவது அவசியம் என அறிவுரை வழங்கப்பட்டது.

சர்ச்சைக்கு இடம் தரக் கூடாது என்று அறிவுரை வழங்கபட்டது. நாட்டு மக்களை குழப்புவோரின் முகத்திரையை கிழிப்பதற்காகவே சகிப்பின்மை பற்றிய விவாதம் நடத்தப்படுகிறது.

பாஜக தலைமையிலான கூட்டணி அரசுதான் வகுப்புக் கலவரங்களை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.எங்கும் இப்போது சமூகநல்லிணக்கம் நிலவுவது பற்றி கட்சி எம்பிக்களிடம் தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருடன் மோடி நடத்திய பேச்சு பற்றி யும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.