ஷெர்வானி, தொப்பி அணியவேண்டும் என்று கூடத்தான் சட்டத்தில் இல்லை

''பாரத் மாதா கி ஜே'' என முழக்க மிடுவது எனது உரிமை என காங்., எம்பி.,யும், பிரபல இந்திசினிமா பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் ராஜ்ய சபாவில் பேசினார். அரசும் எதிர்க் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அனைத்து இந்திய மஜ்லிஸ் இ இட்டிஹாதுல் முஸ்லீமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியைச் சேர்ந்த எம்.பி., ஒவைசி நேற்று அளித்த பேட்டியின்போது, பாரத் மாதா கி ஜே என ஒருபோதும் நான் முழக்கமிட மாட்டேன். அப்படி முழக்கமிட்டே தீரவேண்டும் என சட்டத்தில் கூறவில்லை. எனது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினாலும் என்னால் அவ்வாறு முழக்க மிட முடியாது என பேசினார். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒவைசியின் இந்த கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று ராஜ்ய சபாவில் பேசிய சினிமா பாடலாசிரியரும், காங்., எம்.பி.,யுமான ஜாவேத் அக்தர், எதிர்க் கட்சிகளும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும். அவை ஒத்தி வைப்புக்களோ, கூச்சல்குழப்பமோ முன்னேற்றத்தை ஏற்படுத்தாது. தயவுசெய்து அடுத்த தேர்தலுக்கு ஆதாயம்தேட வேண்டும் என்ற எண்ணத்தை மறந்து விட்டு, நாட்டைப்பற்றி சிந்தியுங்கள் என்றார். அக்தரின் இந்த கருத்தை பலகட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் மேஜையை தட்டி வரவேற்றனர்.

தொடர்ந்து பேசிய அக்தர், பாரத் மாதா கி ஜே என முழங்கவேண்டும் என சட்டத்தில் குறிப்பிடவில்லை என ஒவைசி பேசி உள்ளார். ஷெர்வானி, தொப்பி அணியவேண்டும் என்று கூடத்தான் சட்டத்தில் இல்லை. பாரத் மாதா கி ஜே என முழங்குவது எனது கடமையா இல்லையா என்பது பற்றி நான் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. ஆனால் அப்படி முழக்கமிடுவது எனது உரிமை என்றவர், தொடர்ந்து பல முறை பாரத் மாதா கி ஜே என ராஜ்யசபாவில் முழக்கமிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...