அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்தியஅரசு இலக்கு

ஏழு அம்சதிட்டம் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்தியஅரசு இலக்கு நிர்ணயித் துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர் கூறினார்.

நீர்ப் பாசன வசதியை அதிகரிப்பது, தரமான விதைகள் அளிப்பது, அறுவைக்கு பிந்தைய தானியஇழப்பை தடுப்பது உள்ளிட்ட 7 அம்ச திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு அறிவித்தார்.

இந்நிலையில் குஜராத்மாநில், ஆனந்த் நகரில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பிரகாஷ் ஜவடேகர் பேசும்போது, ''வேளாண் உற்பத்தியை அதிகரிக்க முயற்சிசெய்வதே முந்தைய நடைமுறையாக இருந்தது. ஆனால் நாங்கள் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். 7 அம்சதிட்டம் மூலம் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித் துள்ளது.

துளி நீருக்கு அதிகபயிர்’ என்ற இலக்குடன் அதிகநிதி ஒதுக்கீட்டில் நீர்ப்பாசன வசதிகள் செய்வது, விவசாயிகளுக்கு தரமானவிதைகள் வழங்குவது, மண்வளத்தை காப்பது, அறுவடைக்கு பின் தானியத்தை பாதுகாக்க கிட்டங்கிகள் மற்றும் குளிர்பதன கிடங்குகள் அமைப்பது, உணவு பதப்படுத்துதல் மூலம் தானியத்தின்மதிப்பை கூட்டுவது ஆகியவை 7 அம்ச திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

இவை தவிர, தேசியவேளாண் சந்தை, மின்னணு தகவல் பரிமாற்ற சந்தைகள், புதிய பயிர்காப்பீடு திட்டம், கோழி, மீன் வளர்ப்பு, தேனீவளர்ப்பு உள்ளிட்ட துணைத் தொழில்களை ஊக்குவிப்பது ஆகியவையும் இத்திட்டத்தில் உள்ளன.

மானிய விலை யூரியா, விவசாயம் தவிர பிறபயன்பாட்டுக்கு செல்வதை தடுக்கும் வகையில் வேப்ப எண்ணெய் கலந்தயூரியா அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.7 ஆயிரம்கோடி சேமிக்கிறது. விவசாயிகளுக்கு இதுவரை 7 கோடி மண்வள அட்டைகளை மத்திய அரசு விநியோகம் செய்துள்ளது'' என்றார் பிரகாஷ் ஜவடேகர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...