கறுப்புப்பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த தகவல்கள் 2019 செப்டம்பர் மாதம் முதல் வெளியிடப்படும்

சுவிட்சர்லாந்தில் கறுப்புப்பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த தகவல்கள் 2019 செப்டம்பர் மாதம் முதல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. 

இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் கறுப்புப்பணத்தை அவர்களது  வங்கிக் கணக்குகளில் பராமரித்து வருகின்றனர். இவர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கவேண்டும் என அனைத்து நாடுகளும் சுவிட்சர்லாந்து அரசிடம் வேண்டுகோள் விடுத்தன. 

இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சுவிஸ் அரசு, 38 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 உறுப்பினர்களை கொண்ட  'AEOI' எனப்படும் 'தகவல் பரிமாற்ற' நடைமுறையை அறிமுகப்படுத்தியது. இதனால், அடுத்தாண்டு முதல், பல்வேறுநாடுகளுக்கு கறுப்புப்பணம் குறித்த தகவல்களை சுவிஸ் அரசு வழங்கவுள்ளது. இந்நிலையில், கறுப்புப்பணம் பதுக்கும் இந்தியர்கள் குறித்த தகவல்களை வெளியிடவேண்டும் என மத்திய அரசு முன்வைத்திருந்த நீண்ட நாள் கோரிக்கையை சுவிஸ் அரசு தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.

 இதன்காரணமாக, 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், மத்திய அரசுக்கு கறுப்புப் பணம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறும் என கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி,  வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்படுள்ள இந்தியர்களின் கறுப்புப்பணம் முழுவதுமாக மீட்கப்படும் என உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...