இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அரங்கேற்று வதற்காக நேபாளத்தைப் பயன்படுத்த ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்

இந்தியா – நேபாளம் இடையே பல்வேறுதுறைகளில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நேபாளப்  பிரதமர்  ஷேர்பகதூர் தூபா, இந்தியாவுக்கு 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.


பிரதமராகப் பொறுப்பேற்று அவர் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டுப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, தில்லிக்கு புதன் கிழமை வந்த அவருக்கு, இந்திய அதிகாரிகள் உற்சாகவரவேற்பு அளித்தனர். அதன் பின்னர், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.


இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடியை ஷேர்பகதூர் தூபா வியாழக் கிழமை காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இருநாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தகம், மின்சாரப்பகிர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது. குறிப்பாக, இரு தரப்பு நல்லுறவை மேம்படுத்துவது, பிராந்திய விவகாரங்கள் ஆகியவை குறித்து அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இருநாடுகள் இடையே பல்வேறு துறைகள் தொடர்பாக 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.


அவற்றில், போதைப் பொருள் தடுப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், பேரிடர் மறுசீரமைப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகியவையும் அடங்கும். அதன் பின்னர், இரு நாட்டுத் தலைவர்களும் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தனர். அப்போது, நரேந்திரமோடி பேசியதாவது:


ஷேர் பகதூர் தேவுபாவுடனான சந்திப்பு மிகவும் ஆக்க பூர்வமானதாக இருந்தது. இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினோம். நேபாளத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் இந்தியா எப்போதும் உதவத்தயாராக இருப்பதாக தூபாவிடம் உறுதியளித்திருக்கிறேன். ராணுவ ஒத்துழைப்பு, பாதுகாப்பு ஒருங்கிணைப்பு ஆகியவையே இருநாட்டு நல்லுறவுக்கு முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன என்றார் மோடி.


இதனைத் தொடர்ந்து, நேபாளப்பிரதமர் ஷேர்பகதூர் தூபா கூறியதாவது: மோடியுடனான பேச்சு வார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இரு நாடுகளும் ஒரு சேர வளர்ச்சி அடைவது குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அரங்கேற்று வதற்காக நேபாளத்தைப் பயன்படுத்த ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என ஷேர்பகதூர் தேவுபா தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...