*உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் விளைவு – கல்வி மாஃபியாக்களுக்கு மரண அடி*
– பாலாஜி மருத்துவக்கல்லூரியில் மட்டும் 206 காலி. (ஜகத்ரட்சகனுக்கு சொந்தமானது)
– ACS மெடிக்கலில் 146.
– மீனாக்ஷி மெடிக்கலில் 130.
– செட்டிநாடு மெடிக்கலில் 127.
– SRM மெடிக்கலில் 98.
– ராமச்சந்திரா மெடிக்கலில் 76.
– சவீதா டெண்டல் 77.
எனவே, இவற்றில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 7 வரைக்கும் நீட்டிப்பு.
டீம்டு (Deemed) மருத்துவ பல்கலை கழகங்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே சேர்த்து கொள்ள முடியும்.
ஒரு சீட்டுக்கு குறைந்தது 50 லட்சம் capitation fee என்றால், இந்த 850 இடங்களுக்கு குறைந்தது ரூ 42,500 லட்சம் (42 கோடி). இது போக, வருடத்துக்கு குறைந்தது 10 லட்சம் கல்வி கட்டணம். அது இன்னொரு 42,500 லட்சம். எல்லாம் போச்ச்ச்ச்ச்!
இப்படி இருக்கைகள் நிரப்பப்படாமல் இருந்தால், இந்திய மருத்துவ கவுன்சில் இந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தைக்கூட ரத்து செய்யலாம். அப்படி ரத்து செய்தால், முதலுக்கே மோசம். எனவே, கட்டண சேர்க்கையை குறைத்தால், கல்லூரியை நடத்துவதில் லாபம் இருக்காது. என்ன செய்வார்கள் கல்வி தந்தைகள்?
இவ்வளவு பணத்தையும் கல்வி மாஃபியாக்கள் எப்படி சும்மா விடுவார்கள்?
ஏழையானாலும், புத்திசாலி மாணவர்கள்
'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள். இந்தியாவிலுள்ள எல்லா மாநிலத்திலுமே 'நீட்' தேர்வுண்டு.
தமிழ்நாட்டில் மட்டும், அரசியல் எதிர்கட்சியினர், சினிமாகாரர்களும் தங்கள் சுயநலத்திற்காக மக்களையும், மாணவர்களையும் தூண்டி விட்டு ஆதாயம் தேடுகிறார்கள்.
*அரசியல்வாதிகளுக்கு சொந்தமான 'பினாமி' பள்ளிகளில் 'நீட்' தேர்வு அமலாக்கத்தால் எவ்வளவு கோடிகள் நஷ்டமோ?*
மக்களாகிய நாம் எதையுமே, எப்பொழுதுமே ஆற அமர்ந்து முடிவெடுக்க வேண்டும். அரசியல்வாதிகளை நம்பி, எதற்கெடுத்தாலும் எதிர்க்க கூடாது.
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.