கெஜ்ரிவால் வீட்டில் சோதனை

கடந்த திங்கட் கிழமை நள்ளிரவு தில்லி முதல்வர் இல்லத்தில் முக்கிய  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற இந்தகூட்டத்தில், தில்லி தலைமைச் செயலாளர் அன்ஷூ பிரகாஷ் மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஆம்ஆத்மி எம்எல்ஏ-க்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் தன் காலரைப்பிடித்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் இருவர் தாக்கியதாக அன்ஷு பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அப்போது  அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா உடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அவர் தில்லி துணைநிலை ஆளுநரிடம் புகார் அளித்ததையடுத்து இரண்டு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தசம்பவம் தொடர்பாக, தில்லி காவல் துறையினர், தடயவியல் நிபுணர்களுடன் முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டில் வெள்ளிக் கிழமை (இன்று) சோதனை செய்தனர்.

அப்போது தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளைத் தேடினர். இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் அறையில் சி.சி.டி.வி ஏதும் பெருத்தப்பட வில்லை. முதல்வர் வீட்டில் இருந்த 21 கேமராக்களில் 7 கேமராக்கள் வேலை செய்ய வில்லை என்றனர்.

இந்தசோதனை குறித்து ஏடிஜிபி ஹரேந்திர குமார் சிங் பேசுகையில்: "அந்த அறைக்கு வெளியே இருந்த சிசிடிவி கேமாராக்கள் மூலம் விசாரணை நடத்தப்படும். மேலும் அங்கு 7 கண்காணிப்பு கேமராக்கள் வேலைசெய்யாதது குறித்தும் விசாரணை நடத்தப்படும்" என்றார்.  

இது தொடர்பாக தில்லி முதல்வரிடம் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...