மத்திய அரசு கட்டுப்பாட்டில் செல்லும் பல்கலைக்கழகங்கள்

தமிழகத்தில் உள்ள அண்ணா, சென்னை, கோவை வேளாண் பல்கலைக் கழகங்கள் உள்பட பலவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர  மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை முடிவுசெய்துள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் ஜூன் மாதம் வெளியாகும் என தெரிகிறது.

தமிழகத்தில் சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், கோவை வேளாண் பல்கலைக் கழகம், என 21  பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகின்றன. மேலும் தனியார் பல்கலைக் கழகங்கள், தன்னாட்சிபெற்ற பல்கலைக் கழகங்களும், பிரசிடென்சி காலேஜ்,  ராணி மேரி கல்லூரிபோல தன்னாட்சி பெற்ற கல்லூரிகளும் தமிழகத்தில் பல இடங்களில் இயங்கிவருகின்றன. இந்நிலையில், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நாட்டில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை ஒரே தலைமையின்  கீழ் கொண்டு வரவு முடிவு செய்துள்ளது.

குறிப்பாக அனைத்து மாநிலங்களிலும் இயங்கிவரும் அனைத்து அடிப்படை வசதிகளை கொண்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை தங்கள்  கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளது.


இதன்படி தமிழகத்தில் சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், கோவை வேளாண் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பெரியளவிலான பல்கலைக் கழகங்கள், சென்னை மாகாண கல்லூரி, ராணிமேரி கல்லூரி  போன்ற பெரிய நிலப்பரப்பில் உள்ள கல்லூரிகள் போன்று தமிழகத்தில் எங்கு இருந்தாலும் அவை மத்திய அரசின் கட்டுப் பாட்டுக்குள் வரப் போகின்றன.

இதற்கான, ஆயத்தப் பணிகளை மத்திய அரசு எடுத்துள்ளது.இதற்கு பல்கலை கழக, கல்லூரி ஆசிரியர்கள் ஊழியர்கள் எதிர்ப்புதெரிவித்தும் பயன் இல்லை. இந்நிலையில் மேற்கண்ட பல்கலைக்கழக,  கல்லூரிகளின் சொத்து விவரங்கள், நிதி ஆதாரங்கள், கட்டிடங்கள் மதிப்பு உள்ளிட்ட விவரங்களை மத்திய அரசுக்கு வழங்கு வதற்கான பணிகள்  நடக்கிறது.

வரும் ஜூன் மாதம் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டபிறகு மேற்கண்ட பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மத்திய அரசின்  கட்டுப்பாட்டின் கீழ் செல்லும்.மத்திய அரசின் கட்டுப் பாட்டுக்கு சென்ற பிறகு பல்கலைக் கழகங்களில் இனிமேல் முதுநிலை பட்டப் படிப்புகள், ஆராய்ச்சி சார்ந்த படிப்புகள் மட்டுமே  நடத்தப்படும். இளநிலை, டிப்ளமோபோன்ற படிப்புகளை பல்கலைக் கழகங்கள் நடத்தாது.கல்லூரிகளில் மட்டுமே இளநிலை, டிப்ளமோ படிப்புகள் நடக்கும். அல்லது பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புகளையும் கல்லூரிகளே நடத்தும் வகையில்  அனுமதி வழங்கவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...