நல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்

திரு ஸ்டாலின், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை கருப்பு என்னும் நெருப்பு அணையாது."

ஸ்டாலின் அவர்களே,

முதலில் உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தின் மேல் படர்ந்துள்ள ஊழல் என்னும் கருப்பை அகற்றுங்கள்.

திரு பென்னி குயிக் என்னும் ஆங்கிலேயர் தனது சொந்த பணத்தில் முல்லை பெரியாறு அணையை கட்டியதாக சொல்வார்கள்.

கடந்த 50 வருடங்களில் உங்கள் கட்சி மாநிலத்திலும் மத்தியில் கூட்டணியாக ஆட்சியில் இருந்த போது வருமானத்திற்கு மிக அதிகமாக முறைகேடாக சொத்து குவித்ததாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் இன்றும் பேசி கொண்டு இருக்கிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக தான் சர்க்காரியா கமிஷன் குற்ற சாட்டில் இருந்து விடுபட திருமதி காந்தியிடம் சரண் அடைந்து 1974ல் காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல், கர்நாடகாவில் அணைகள் கட்ட அனுமதி அளித்ததன் விளைவே இன்றும் காவிரி நீர் பங்கீட்டு பிரச்சனை தீராமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் சொல்லி வருகிறார்கள்.

எனவே முறை கேடாக சேர்த்த சொத்தைக் கொண்டு தமிழகத்தில் காவிரியின் குறுக்கே சிறு சிறு அணைகளை கட்டி அதிகமாக மழை பெய்யும் காலங்களில் வரும் உபரி நீரை சேமித்து வறட்சியான காலங்களில் அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து ஏழை விவசாயிகளின் துயரை உங்கள் குடும்பம் துடைக்கலாமே.

தமிழகம் தாழ்வு பிரதேசமாக இருப்பதால் மேட்டுர் போன்ற பெரிய அணைகள் கட்டுவது சாத்தியமில்லை என வல்லுநர்கள் கூறுகின்றனர்.எனவே பல சிறு அணைகள் கட்டுங்கள்.

அதன் மூலம் ஓரளவு உங்கள் குடும்பத்தின் மேல் படர்ந்துள்ள ஊழல் கறையை நீக்கலாம்.

அதுவரை நீங்கள் என்ன நடை போட்டாலும் ஆட்சி என்னும் கட்டிலில் ஏற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நேர்மை என்னும் வெள்ளையை அணிந்து கொண்டு இந்த தலைமுறை மற்றும் அடுத்த தலைமுறையின் வளமான வாழ்வுக்கும் பாடுபட்டு வரும் மோடி என்னும் ஜீவ நதி, உங்களைப் போன்ற ஊழல் இரட்டைவாதிகள் தவறான முறையற்ற போராட்டங்கள் மூலம் தமிழகத்தில் கலவரம் மற்றும் பிரிவினை என்ற நெருப்பை மூட்ட முயன்றால்,அதை அணைத்து போகும் இடங்களில் எல்லாம் பசுமையை உண்டாக்கும்.

போகும் இடங்களில் எல்லாம் நல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...