வங்கிகளின் நிதி ஆதாரங்களை பெருக்க பட்ஜெட்டில் திட்டமிட்டம்

வங்கிகளின் நிதி ஆதாரங்களை பெருக்க பட்ஜெட்டில் திட்டமிட்ட தொகையை விட கூடுதலாக நிதி ஒதுக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.  அரசின் இந்தமுடிவுக்கு மத்திய நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் இன்று ஒப்புதல் கோரியிருந்தது.

இந்தநிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, “இந்தஆண்டு பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதலாக 41 ஆயிரம் கோடி ரூபாய் நிதியளிக்கப்படும் என அறிவித்தார். இதன்மூலம், இந்தநிதியாண்டில் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் செலுத்தும் தொகை 1.06 லட்சம்கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் அரசு ஏற்கெனவே 23 ஆயிரம்கோடி ரூபாய் செலுத்திய நிலையில், இந்தநிதியாண்டில் மீதமுள்ள மூன்று மாதங்களில் மேலும் 83 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படும். இதன்மூலம் வங்கிகளின் வாராக்கடன் பிரச்னை தொடர்பாக ரிசர்வ்வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளிலிருந்து அவை வெளியே வரும். வாராக்கடன்களை கண்டறியும்பணி ஏறத்தாழ முடிவடைந்து விட்டது.” என்று தெரிவித்தார்.

அதிக கடன் சுமையில் சிக்கியுள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு புதிய கடன்வாங்க ரிசர்வ் வங்கி தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்திய வங்கித்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக ஆறேமாதங்களில் ரூ. 60,000 கோடிக்கும் அதிகமான வாராக்கடன் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள மத்தியநிதி அமைச்சகம், நடப்பு நிதியாண்டில் சந்தைமூலமாக ரூ. 24,440 கோடியை வங்கிகளின் மேம்பாட்டிற்காக பெறமுடியும் என தெரிவித்தது. மேலும், பொதுத்துறை வங்கிகளுக்கு திருப்பிச்செலுத்தாமல் இருந்த ரூ. 60,730 கோடி கொடுபடவேண்டிய வாராக்கடன்கள் இப்போது வெற்றிகரமாக வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும், இது கடந்த 6 மாதங்களின் நிலைமை மட்டும் தான் என்றும் மத்திய நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...