வடகிழக்கு மாநிலங்களில் கூட்டணி அமைத்து விட்டடோம்

வடகிழக்கு மாநிலங்களில் கூட்டணி அமைத்து விட்டதாகவும், அங்கு மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 22 தொகுதிகளில் வெற்றியை இலக்காக நிர்ணயித்து ள்ளதாகவும் பாஜக பொதுச் செயலாளர் ராம்மாதவ் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் கூட்டணி பேச்சு வார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பாஜகவின் பொதுச்செயலாளரும் வடகிழக்கு மாநிலங்களின் பாஜக பொறுப்பாளருமான ராம்மாதவ் செவ்வாய்கிழமை நள்ளிரவு வரை பிராந்திய கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வந்தார்.

இதையடுத்து, வட கிழக்கு மாநிலங்களில் உள்ள அசோம் கண பரிஷத் (ஏஜிபி), போடோலாந்து மக்கள்முன்னணி (பிபிஎஃப்), திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணி கட்சி (ஐபிஎஃப்டி), தேசிய மக்கள் கட்சி (என்பிபி), தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) மற்றும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா பாஜகவின் கூட்டணிகளை உறுதிசெய்தார்.

இதுகுறித்து, ராம் மாதவ் தனது பேஸ்புக் பதிவில், “வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள 25 தொகுதிகளில் 22 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றிபெறும் திறன் இந்த கூட்டணிக்கு உள்ளது. மேலும், மோடியை மீண்டும் பிரதமராக பார்ப்பதற்கு இந்த கூட்டணி மிக முக்கியமான பங்கை வகிக்கும்.

நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இறுதியாக பாஜக மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தின் அனைத்து பிரதான கட்சிகளுக்கிடையிலான தேர்தல்புரிந்துணர்வு மற்றும் கூட்டணி உறுதியானது.

அசாம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் பாஜக, என்பிபி, என்டிபிபி, ஏஜிபி மற்றும் பிபிஎஃப் ஆகிய கட்சிகள் காங்கிரஸ் கட்சியை வீழத்தும் நோக்கத்தில் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளது. திரிபுராவில் பாஜக, ஐபிஎஃப்டி கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது.

சிக்கிமில் பிரதான எதிர்க் கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடவுள்ளது” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...