தன்னம்பிக்கையை விவசாயிகளிடம் தான் கற்கமுடியும்

சிட்டி யூனியன் வங்கியின் 116-வது ஆண்டுவிழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதா ராமன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
வங்கி என்ற பெயரே மக்களை அச்சுறுத்த தொடங்கிவிட்டது. எங்கேயோ ஒருசிறிய கூட்டுறவு வங்கி செய்யும் மோசடியால் மக்களுக்கு வங்கிகள்மீது நம்பிக்கை குறைய தொடங்கியுள்ளது. ஏதோ ஓர்இடத்தில் யாரோ ஒருவர் செய்யும் தவறு மொத்தவங்கிகள் மீதும் சந்தேகம் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது.
நாட்டின் பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்வாதாரத்திலும் முக்கியபங்கு வகிக்கும் வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்க தொடங்கினால் அது அவர்களுக்கும் நாட்டுக்கும் மிகவும்கெடுதலாக முடியும்.
ரிசர்வ் வங்கி மூலம் இங்குள்ள வங்கிகளை உலகத்தரத்திற்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

மேலும் ப.கிருஷ்ணன் எழுதிய, முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,புத்தகத்தை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை முன்னாள் நீதியரசர் சதாசிவம் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில்பேசிய நிர்மலா சீதாராமன்; ஆசிரியர் தினத்தை கொண்டாடவில்லை என்றாலும்கூட, ஆசிரியர்கள் காட்டும் நல்வழிகளை பின் பற்றினால் வாழ்க்கை மேம்படும். அரசை குறைகூறாமல் விவசாயிகளை போல் தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் உழைக்கவேண்டும். என்ன பிரச்னை வந்தாலும் சோர்ந்து விடாமல் தொடர்ந்து முயற்சிப்பவர்கள் விவசாயிகள். விடா முயற்சி என்பதை விவசாயிகளிடம் இருந்துதான் கற்கவேண்டும்.

விவசாயிகள் எந்த விதத்திலும் தளர்ந்துபோக மாட்டார்கள். அதனால் தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டால், அதைவிட கொடுமையான விஷயம் இல்லை என நம் அனைவரின் மனதில் ஒரு வித உறுத்தல் ஏற்படுகிறது. தன்னம்பிக்கையை விவசாயிகளிடம் தான் கற்கமுடியும் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.