யோகி மருந்து வேலை செய்யுது….

உத்திர பிரதேச முதல்வர் உ.பியின் வீரத் துறவி யோகி ஆதித்யநாத் அவர்களின் அதிரடிக்கு பணிந்தனர் கலவரக்காரர்கள். CAA எதிர்ப்பு ஆர்பாட்ட வன்முறையால் பொதுச் சொத்துக்கள் சேதமடைந்த நிலையில் வன்முறையாளர்கள் யார்? யார்? என்பதும், எந்த பகுதியில் யாரால் வன்முறை நடத்தப் பட்டது? யாரால் தூண்டப்பட்டது ? என்பதையெல்லாம் கண்டறிந்து சம்மந்த பட்டவர்களுக்கு இழப்பீடு தொகையை வசூல்செய்யும் பொருட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுபப்பட்டு வருகிறது.

இதனிடையே வன்முறைகளமான மீரட்டின் புலந்தர்ஷா பகுதியைச் சேர்ந்த மக்கள் (வன்முறையில் ஈடுபட்டோர்)தாங்களாகவே முன்வந்து 6 லட்சம் இழப்பீடை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் கொடுத்துள்ளனர். இதுகுறித்த கூட்டம் சென்றவாரத்தில் நடைப்பெற்றதை அடுத்து நேற்று ஊர்மக்கள் உள்ளூர் இஸ்லாமிய அரசியல் தலைவர் ஷைக்கிலுல்லா தலைமையில் வந்திருந்து பொதுச் சொத்து சேதப்படுத்தியதற்கான இழப்பீடு தொகையை கொடுத்தனர்.

மேலும் அன்றைய வன்முறையின் போது காவல்துறை வேன் ஒன்று போராட்டக் காரர்களால் கொளுத்தப் பட்டது. அதே போன்றதொரு வேன் புதியதாக வாங்கித்தர ஒத்துக்கொண்ட அப்பகுதி மக்கள், அந்த மாடல் கிடைக்காத காரணத்தால் அதற்குரிய பணத்தையும் செலுத்தியதாக தெரிகிறது. மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் இனி இதுபோன்று வன்முறைகளில் எக்காலத்திலும் ஈடுபடமாட்டோம் என்று உறுதிமொழி அளித்ததாகவும் கூறப்படுகிறது. தாங்களாகவே முன்வந்து சேதத்திற்கான இழப்பீடு தொகையை கொடுத்துச்சென்ற அம்மக்களால் துறைரீதியான காலதாமதம் தவிர்க்கப்பட்டிருப்பதாக கூறிய மாவட்ட நிர்வாகம், மற்றப்பகுதிகளிலும் இதே நடைமுறையில் மக்கள் நடந்துகொண்டால் அவர்களுக்கும் சிக்கல் இல்லை, நிர்வாக தாமதமும் நடக்காது என்று தெரிவிக்கின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...