முன்கள பணியாளர்கள் மூன்றுகோடி பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி

முன்கள பணியாளர்கள் மூன்றுகோடி பேருக்கு, முதற்கட்டத்தில் செலுத்தப்படும் தடுப்பூசிக்கு ஆகும்செலவை, மத்திய அரசே ஏற்கும்,” என, பிரதமர் நரேந்திரமோடி நேற்று தெரிவித்தார்.

கொரோனா வைரசுக்காக உருவாக்கப்பட்டுள்ள, ‘சீரம் இன்ஸ்டிட்யூட்’ நிறுவனத்தின், ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிக்கும், ‘பாரத்பயோடெக்’ நிறுவனத்தின், ‘கோவாக்சின்’ தடுப்பூசிக்கும், அவசர காலத்தில் பயன்படுத்த, மத்தியஅரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது.இந்த தடுப்பூசிகளை, மக்களுக்கு செலுத்தும்பணிகள், வரும், 16ம் தேதி, நாடுமுழுதும் துவங்க உள்ளன.

இந்நிலையில், கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சூழல்குறித்தும், தடுப்பூசி வினியோக நடைமுறை குறித்தும், அனைத்துமாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

நம் நாட்டில், கொரோனா வைரசுக்கான இரண்டு தடுப்பூசிகளுக்கு, இது வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு தடுப்பூசிமருந்துகள், இறுதிகட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டுள்ள, கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள், உலகில் உருவாக்கபட்டுள்ள இதர தடுப்பூசிகளைக் காட்டிலும், விலை குறைவானவை.அதிக செயல்திறன் உடைய தடுப்பூசிகள், நாட்டுமக்களுக்கு கிடைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், நம் ஆராய்ச்சியாளர்களும், மருத்துவ நிபுணர்களும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இவற்றை தயாரித்துள்ளனர்.மக்களுக்கு தடுப்பூசிசெலுத்தும், உலகின் மிகப்பெரிய திட்டம், நம் நாட்டில், வரும், 16ம் தேதி துவங்க உள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று சேவையாற்றி வரும், முன்கள பணியாளர்கள் மூன்று கோடிபேருக்கு, முதற்கட்டத்தில், தடுப்பூசி செலுத்தப்படும். இந்த மூன்று கோடி பேருக்கும், தடுப்பூசிக்கு ஆகும்செலவை, மாநில அரசு ஏற்கத் தேவையில்லை. அந்த செலவை, மத்திய அரசே ஏற்கும். சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களை தவிர, வேறுயாரும், இந்த தடுப்பூசியை முதற்கட்டத்தில் எடுத்துக்கொள்ள கூடாது. மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகள், தங்கள் வாய்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும். முதற்கட்டத்தில் முந்தவேண்டாம்.உலகில் உள்ள, 50க்கும் மேற்பட்ட நாடுகளில், 2.5 கோடி பேருக்கு மட்டுமே, இதுவரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நம்நாட்டில், அடுத்த சில மாதங்களில், 30 கோடி பேருக்கு, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

மஹாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த, ‘சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா’ நிறுவனத்திடம் இருந்து, கொரோனா வைரசுக்கான, ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிமருந்துகளை கொள்முதல் செய்வதற்கு, மத்திய அரசு, நேற்று, ‘ஆர்டர்’ செய்தது. அதன்படி, 1.1 கோடி தடுப்பூசி மருந்தின், ‘டோஸ்’களை வாங்க, ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்தின் ஒருடோஸ் விலை, 200 ரூபாயாக நிர்ணயித்துள்ள சீரம்நிறுவனம், ஜிஎஸ்டி., வரியாக 10 ரூபாயை சேர்த்து, 210 ரூபாய்க்கு, விற்க உள்ளது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில்,’ ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த, 2016ல் துவக்கிவைத்தார். இந்ததிட்டத்தின் சர்வதேச மாநாடு, வரும், 15, 16ம் தேதிகளில், ‘வீடியோ கான்பரஸ்’ வழியாக நடக்கஉள்ளது.

இந்தமாநாடு பற்றி, ‘டுவிட்டரில்’ பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:இந்த மாநாட்டில், சுயதொழில்துவக்க ஆர்வமுள்ள இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்கவேண்டும். நம், ‘ஸ்டார்ட் அப்’ ‘ஹீரோ’க்கள், பெரும் நகரங்களிலிருந்து மட்டுமல்லாமல், சிறிய நகரங்களில் இருந்தும் உருவாகியுள்ளனர் என்பதில் பெருமிதப் படுகிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...