நாட்டையும் அதன் ஒருமைப்பாட்டையும் மதிப்பகதா ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்

நாட்டையும் அதன் ஒருமைப்பாட்டையும் மதிப்பதாக ஒவ்வொருவரும் உறுதியேற்கவேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக காந்தியடிகள் 1922ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்த போது, உத்தரப்பிரதேசத்தின் சவுரி சவுராவில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் காவல்நிலையத்தை தீவைத்துகொளுத்தினர். இதில் விவசாயிகள் மூவரும், காவல் துறையினர் 23 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிகழ்வின் நூற்றாண்டையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் பங்கேற்று உரையாற்றினார். வேளாண்மையை லாபமுள்ள தொழிலாகவும், விவசாயிகளைத் தன்னிறைவு பெற்றவர்களாகவும் மாற்ற அரசு பாடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார். நாட்டின் அடிப்படையாக திகழ்பவர்கள் விவசாயிகள் என்றும், சவுரிசவுரா நிகழ்வில் விவசாயிகளின் பங்கு மிகப் பெரியது என்றும்  தெரிவித்தார்.

கொரோனா சூழலிலும் விவசாயிகள் அதிகளவு தானிய விளைச்சல் கண்டு சாதனை படைத்ததை நினைவுகூர்ந்தார். பட்ஜெட்டில் எளியமனிதரை பாதிக்காத வகையில் வரி உயர்த்தப்பட வில்லை என்றும், நலவாழ்வு, உட்கட்டமைப்பு, விவசாயிகள் நலன் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...