வரும் பாராளுமன்ற தேர்தலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த படுவதற்கு வாய்ப்பு இல்லை என பாஜக செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து கூறியதாவது:-
2014-ம் ஆண்டு வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாஜக.,வை சேர்ந்தவரே பிரதமர் வேட்பாளராக நிறுத்துப் படுவார். இதில் எந்தசந்தேகமும் இல்லை . ஏனெனில் பாஜக நாட்டின் ஒருமுக்கிய கட்சியாக இருக்கிறது . நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தபடுவது சம்பந்தமாக உரியநேரத்தில் விவாதிக்கப்படும். நாட்டுமக்களின் பெரும்பான்மையான ஆதரவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கே உள்ளது என்றார்.
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
Leave a Reply
You must be logged in to post a comment.