நமது கல்வித்திட்டத்தில் ஆன்மிகம் தொடர்பான விஷயங்கள் கற்பிக்கப்பட வேண்டும்

 நமது கல்வித்திட்டத்தில் ஆன்மிகம் தொடர்பான விஷயங்கள் கற்பிக்கப்படவேண்டும் ராமகிருஷ்ண பரமஹம் ஸர், ஸ்வாமி விவேகானந்தர், நாராயணகுரு போன்ற ஆன்மிக_குருக்களின் தத்துவங்களையும் உபதே சங்களையும் பள்ளி பாடத் திட்டத்தில் சேர்ப்பதற்கு அனைத்து அரசுகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி தெரிவித்துள்ளார் .

கேரள மாநிலத்தில் நாராயணகுரு நிறுவிய சிவகிரி மடத்தின் 80ம் ஆண்டுக் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: மன்னர்களையும் போர் நாயகர்களையும் பற்றி கற்பிப்பதோடு நின்றுவிடாமல் . நமது நாட்டின் பெரும்துறவிகள், ஆன்மிக தலைவர்கள் போன்றோரின் உபதேசங்களும் பாடத்திட்டத்தில் இடம்பெறவேண்டும். அப்போது தான் குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும் ஆன்மிக சிந்தனைகளை ஆழமாக பதியவைக்கமுடியும்.

ராமகிருஷ்ண பரமஹம் ஸர், ஸ்வாமி விவேகானந்தர், நாராயணகுரு போன்ற ஆன்மிக_குருக்களின் தத்துவங்களையும் உபதே சங்களையும் பள்ளி பாடத் திட்டத்தில் சேர்ப்பதற்கு அனைத்து அரசுகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கேரள பள்ளி பாடத் திட்டத்தில் அடுத்த ஆண்டிலிருந்து நாராயண குருவின் தத்துவங்கள் சேர்க்கப்பட_உள்ளன. நம் நாட்டின் கல்வியை மேம்படுதுவதற்கு அதுதான் சிறந்தவழி. மத்திய அரசும் இதனை பின்பற்றவேண்டும்.

நாராயண குருவின் ஜாதியைக் குறித்த கருத்துகள் முக்கியமானவை . ஜாதிகளின் பெயரால் மனிதகுலத்தை பிரிக்கக்கூடாது. உயிரினம் எனும் அளவில் நோக்கும்போது மனித குலத்தை ஜாதி மதங்களின் பேரில் வேறுபடுத்தி காணமுடியாது. ஒருமனிதன், ஹிந்துவாகவோ முஸ்லிமாகவோ கிறிஸ்துவராகவோ இருக்கலாம். ஆனால் ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனைப் பிரித்துவைக்க அது பயன்படக்கூடாது. நல்ல மனிதனாக ஒருவன் இருப்பது தான் முக்கியம் என்றார் அத்வானி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...