சமூக நல்லிணக்கத்தினை வலியுறுத்தி பிப்ரவரி இறுதியில் பாத யாத்திரை

சமூக நல்லிணக்கத்தினை வலியுறுத்தி    பிப்ரவரி இறுதியில் பாத யாத்திரை  சமூக நல்லிணக்கத்தினை வலியுறுத்தி, தர்மபுரியை சுற்றி இருக்கும் மாவட்டங்களில் பிப்ரவரி இறுதியில் பாத யாத்திரையை நடத்த உள்ளதாக பா.ஜ.க,, மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது. தமிழக அரசின் ஒரு வருட நிலைப்பாட்டினை , கவர்னரின் உரை வெளிப்படுத்துகிறது. விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களுக்காக, கர்நாடகாவிடம் இழப்பீடுகோரி வழக்குதொடர, அரசு தயாராகி வருகிறது. இதிலிருந்து, விவசாயிகள் இழப்புக்குள்ளாகி உள்ளதை , அரசு தெரிந்துள்ளது. விவசாயிகளுக்கு, இழப்பீடு முன்பணம் வழங்கவேண்டும்.

மதுரையில் பயங்கரவாதிகளின் நடமாட்டம், வெடிகுண்டுசோதனை நடப்பது தெரிந்தும், நடவடிக்கை இல்லை. அரசியல் தலைவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதும் , கொலைசெய்யப்படுவதும் சாதாரணமாகி விட்டது. பலவழக்குகளில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறையில் இருந்தபடியே குற்றவாளிகள், கொலைகளில் ஈடுபடுவது மக்களை அதிர்ச்சிகுள்ளாக்கி உள்ளது . சட்ட ஒழுங்கை காக்கும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

குறைவான மழைப்பொழிவை கொண்ட குஜராத்தில், தண்ணீர் பற்றாக்குறை உருவாகாமல் சமாளிக்கப்படுகிறது. தமிழகத்தில் போதிய மழைபெய்தும், தண்ணீரை சேமிப்பதற்கு தடுப்பணைகள், அணைகள் கட்டப்படவில்லை. பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங், பிப்., 7 ம் தேதி , சென்னை வருகிறார். சமூக நல்லிணக்கத்தினை வலியுறுத்தி, தர்மபுரியை , சுற்றி இருக்கும் மாவட்டங்களில் பாதயாத்திரை செல்ல உள்ளேன் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...