தேவை இந்திய ஜப்பானிய இராணுவ ஒத்துழைப்பு.

தேவை இந்திய ஜப்பானிய இராணுவ ஒத்துழைப்பு. சீனா தன் துருப்புக்களை பாரத்தின் எல்லைக்குள் அனுப்பி கூடாரமடித்துத் தங்கியுள்ளது. இதற்குச் சீனா கூறும் காரணம் இந்தியா தன் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டது ஆகவே அந்நிலப்பரப்பை மீட்டெடுக்கிறோம் என்பதே. சுப்பிரமணியன் சுவாமி சீன ஆக்கிரமிப்பு மற்றும் இந்தியா

மீதான் சீனக் குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசு அறிக்கை தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார். மன்மோகன் அரசு இது நிலத் தகராறு என்பதற்கு மேல் ஏதுமில்லை என்பது போலச் சும்மா இருக்கிறது.

சீனா ஆக்கிரமித்தது ஆக்கிரமிப்பு எண்ணத்தில் இல்லை என்று மைய அரசு ஆரூடம் சொல்கிறது. சீனத்தின் எண்ணம்/செயல்கள் குறித்து வக்காலத்து வாங்க கம்யூனிஸ்டுகள் இருக்கிற போது மைய அரசுக்கு அதைச் செய்ய என்ன அழுத்தம் என்பது ஆராய்ச்சிக்குரிய கேள்வி. அரசு மறுத்தாலும் இராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கை வல்லுநர்கள் சீனத்தின் செயல் நல்லெண்ணத்தின் அடிப்படையில் அல்ல என்றே கருதுகிறார்கள்.

சல்மான் குர்ஷித் சீனா போய்ப் பேசுவார் என்று அரசு சொல்கிறது. சீனத்தின் செயலுக்கு வரிந்துகட்டி வக்காலத்து வாங்கிய பின் பேச என்ன இருக்கிறது என்பது புரியவில்லை.

இந்நிலையில் சீனா கீழ்ச்சீனக் கடல் பகுதியில் ஜப்பானைச் சீண்டிப்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஜப்பானியப் பிரதமர் ஷென்ஸோ ஏப் சீண்டாதே என்று சீறுகிறார். சென்காகு-டயோயஸ் பகுதியில் அவர் சீறுவதால்தான் சீண்டலே நடக்கிறது என்கிறது சீனா. அப்பகுதிகளில் கூடுதலாக  கடற்படை மற்றும் விமானப்படை ரோந்துகளை சீனா அதிகரித்துள்ளது.

பொதுவாக இருநாடுகளுடன் இரு முனைகளில் ஒரு நாட்டுக்கு எல்லைப் பிரச்சினை இருந்தால் ஒவ்வொன்றாக பேச்சுவார்த்தையிலோ அல்லது வேறு வகைகளிலோ தீர்த்துக் கொள்வது வழக்கம். இரு எதிர்ப்பு நாடுகளும் கூட்டுச் சேர்ந்து கொண்டால் பிரச்சினை விஸ்வரூபமெடுக்கும் என்பதால் இந்த வழக்கம்.

ஆனால் சீனா அதீத நம்பிக்கையில் அங்கங்கே விளையாடிப் பார்க்கிறது. நம் அரசு கம்யூனிஸ்டு ஆதரவு வேண்டுமே என்று சீனாவை இழுத்து மூடுகிறது. ஆனால் ஜப்பான் ரஷ்யாவுடனான தன் எல்லைப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை துவக்கியிருக்கிறது. சீனம் சீண்டும் போது பிறர் அதனுடன் சேரக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வே காரணம்.

இந்திய ஜப்பானிய இராணுவ புரிந்துணர்வுகள் இன்றைய நிலையில் சீனத்தைச் சமாளிக்க உதவும். சீனத்துடன் எல்லை உள்ளிட்ட விஷயங்களில் சண்டைக்கட்டத் தயாராகும் எந்த நாட்டுடனும் சற்றே இணக்கம் காட்டுவது நமக்கு நல்லது. நம் தேசநலன் இதில் வலுப்படும். சீனம் தந்த துணிவில் தான் இலங்கை நம்மை உதாசீனப்படுத்துகிறது. பாகிஸ்தானும் சீனத்தின் ஆதரவில் நம்மோடு மோதுகிறது.

ஆகவே இன்றைய நிலையில் சீனத்தைச் சற்றே அடக்க ஜப்பானுடன் புரிந்துணர்வுகளை வலுப்படுத்துவது முக்கியம் என்பதே பாதுகாப்பு மற்றும் அயலுறவு வல்லுநர்களின் ஏகோபித்த கருத்து. செயல்படுத்த தேசநலன் நாடும் தலைமை வேண்டும். அடுத்த தேர்தல் 2014 வரை சீனம் காத்திருக்காது. நாம் மன்மோகன் அரசுக்குத்தரும் அழுத்தத்திலேயே நம் நலம் காக்கப்படுமா அல்லது காற்றில் பறக்குமா என்பது முடிவாகும்.

நன்றி; அருண்பிரபு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...