பத்து ஆண்டுகள் பதவியில் நீடித்தது தான் பிரதமர் மன்மோகன் சிங்கின் சாதனை

 பத்து ஆண்டுகள் பதவியில் நீடித்தது தான் பிரதமர் மன்மோகன் சிங்கின் சாதனை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்ஆர். வெங்கடேஷ் எழுதிய “டாக்டர் மன்மோகன்சிங் – பத்தாண்டு சீரழிவு’ என்ற ஆங்கிலபுத்தகம் வெளியிடப்பட்டது.

இந்தப்புத்தகத்தை வெளியிட்டு சுப்பிரமணியன் சுவாமி பேசியது:

மன்மோகன் சிங் இந்த நாட்டுக்கு செய்த மிகப் பெரிய சேவையாக நான்கருதுவது அவர் தொடர்ந்து பத்து ஆண்டுகள் பதவியில் நீடித்தது தான். வேறொருவர் அந்தப்பதவியில் வராமல்செய்ததன் மூலம் அவர் நாட்டை மிகப் பெரிய சீரழிவிலிருந்து காப்பாற்றியுள்ளார்.

வரும்தேர்தலில் பாஜக. பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சியமைக்கும் என உறுதியாக நம்புகிறேன். அந்த நம்பிக்கையால் நான் பாஜக.வில் இணையவில்லை. ஜன சங்கம் அமைப்பில் ஏற்கெனவே இருந்துள்ளதால், இப்போது பாஜக.வில் இணைந்துள்ளேன்.

பாஜக.வின் தொலை நோக்கு திட்டத்தை தயாரிக்கும்குழு அந்த திட்டம்குறித்து எனது கருத்துகளை கேட்டது. அந்த தொலை நோக்கு திட்டத்தில் உள்ள அல்லது சேர்க்கப்பட உள்ள அம்சங்கள்குறித்து எனது கருத்துகளை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

புதிய அரசின்கொள்கைகளில் முதன்மையானதாக பொருளாதார சீர்திருத்தங்கள் ஏழைகளையும் சென்றடையும்வகையில் இருக்கும். முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், ஆந்திர முன்னாள்முதல்வர் சந்திரபாபுநாயுடு போன்றோர் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களில் தொழில்நிறுவனங்களும், பணக்காரர்களும் உடனடியாக பயனடைந்தனர். ஏழைமக்களை அந்த சீர்திருத்தங்கள் உடனடியாகச் சென்றுசேராததால், அடுத்துவந்த தேர்தல்களில் அவர்களால் வெற்றியைப்பெற முடியவில்லை.

இந்திய மக்கள் தொகை இந்தியாவுக்கு மிகப் பெரிய பலமாக உள்ளது. 70 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியர்கள் 35 வயதுக்கு உள்பட்டவர்கள். இவர்கள் அனைவருக்கும் உரியகல்வியை வழங்கினால் அவர்கள் இந்திய பொருளாதாரத்தை மிகப் பெரிய அளவில் முன்னெடுத்து செல்வார்கள்.

பெட்ரோல் விலை உயர்வைச்சமாளிக்க “ஹைட்ரஜன் ஃப்யூல்செல்’ ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். “ஹைட்ரஜன் ஃப்யூல் செல்’ மூலம் அனைத்து வாகனங்களையும் இயங்கவைக்கும் வகையில் தொழில்நுட்பம் வளரும். அப்போது விலை உயர்வைப் பற்றியகவலை இருக்காது.

அதே போல், உலகத்தில் உள்ள தோரியத்தின் அளவில் இந்தியாவில்மட்டும் 60 சதவீதம் தோரியம் உள்ளது. அணு சக்தி எரிபொருளான யூரேனியம் 2050-க்குள் தீர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்துக்கு பிறகு இந்தியாவில் தோரியம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு எந்த வித நிதியுதவியும் வழங்கப்படுவதில்லை.

தோரியம்தொடர்பான ஆராய்ச்சிகளில் புதிய அரசு பிரதானகவனம் செலுத்தும். அணு உலைகளில் தோரியத்தை பயன்படுத்த தொடங்கினால், இந்தியாவில் மின் தட்டுப்பாட்டு பிரச்னையே இருக்காது.

அதேபோல், உலகத்தில் உள்ள பெரியநாடுகளில் இல்லாதவகையில் இந்தியாவில் மட்டும் தான் ஆண்டின் 12 மாதங்களும் விவசாயம் செய்யமுடியும். ஆனால், மொத்த விவசாயிகளில் 25 சதவீதம்பேர்தான் ஒரு போகத்துக்கும் கூடுதலாக விவசாயம் செய்கின்றனர்.

விவசாயத்தில் மேலும் அறிவியல் முறைகளைப் புகுத்தி மூன்றுபோகங்கள் விளைவித்தால் அனைத்து நாடுகளையும் நாம் மிஞ்சலாம், என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...