தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வுகாண தேசிய ஜனநாயக கூட்டணி முன்னுரிமை தரும்

 தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வுகாண தேசிய ஜனநாயக கூட்டணி முன்னுரிமை தரும் என்று பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார். சென்னையில் பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களான விஜயகாந்த், வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோருடன் ராஜ்நாத்சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் பா.ஜ.க கூட்டணிகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து பாஜக கூட்டணியின் தொகுதிப்பங்கீட்டு விவரமும் தொகுதிகள் விவரமும் அறிவிக்கப்பட்டன.

அப்போது செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் கூறியதாவது: இந்திய அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் இது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளுக்கு நன்றி. இந்தகூட்டணி அமைய பாடுபட்ட தமிழருவி மணியனுக்கும் மிக்கநன்றி.

தமிழக மீனவர் பிரச்சனை என்பது நாட்டின்பாதுகாப்பு தொடர்பானது. இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும் தமிழகமீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காணவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முன்னுரிமை கொடுக்கும்.

தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வுகாணததற்கு காங்கிரஸ் அரசேகாரணம். அதே போல் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாணவும் தேசிய ஜனநாயக கூட்டணி கவனம்செலுத்தும். தேசிய ஜனநாயகக் கூட்டணியானது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை மதித்து நடந்துகொள்ளும். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...