வலுவான, வளமான இந்தியாவால்தான் அண்டை நாடுகளுக்கு உதவமுடியும்

 வலுவான, வளமான இந்தியாவால்தான் அண்டை நாடுகளுக்கு உதவமுடியும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் பூடான் சென்றார். பிரதமர் பதவியேற்ற பிறகு அவரது முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

முதல்நாளில் தலைநகர் திம்புவில் மன்னர் ஜிக்மே வாங்சுக் மற்றும் பிரதமர் ஷெரிங் தோப்கய் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இந்திய உதவியுடன் கட்டப்பட்ட பூடான் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கட்டிடத்தையும் அவர் திறந்துவைத்தார்.

சுற்றுப்பயணத்தின் 2ம் நாளான நேற்று நரேந்திரமோடி பூடான் நாட்டின் பாராளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்தியா எப்போதுமே அண்டை நாடுகளுடன் நட்புறவு வைத்துக் கொள்வதையே விரும்புகிறது. இந்தியா வளமான நாடாக இருந்தால்தான் இந்த பிராந்தியம், குறிப்பாக தெற்காசியகூட்டமைப்பு நாடுகள் முன்னேற முடியும். மேலும், இந்தியா வளமாகவும், வலிமையாகவும் திகழ்ந்தால்மட்டுமே அருகில் உள்ள சிறிய பக்கத்து நாடுகளின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.

அண்டை நாடுகளின் வளர்ச்சியில் இந்தியாவுக்கும் பொறுப்புள்ளது என்பதை இந்தியா உணர்ந்து இருக்கிறது. அதனால் தான் எனது பதவி ஏற்பு விழாவின்போது தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் ஆட்சிமாற்றத்தால் இந்தியா–பூடான் இடையே நிலவும் வலிமையான நட்புறவில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. அதுதொடரும்.

பூடானும், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களும் கூட்டாக விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பான புதியபரிந்துரைகள் மற்றும் இமயமலையில் ஒருங்கிணைந்த பல்கலைக் கழகத்தை ஆராய்ச்சிக்காக நிறுவுவது ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு மேலும்விரிவடையும்.

ஒருநாட்டை தீவிரவாதம் பிளவுபடுத்துகிறது. அதேநேரம் சுற்றுலா ஒற்றுமை படுத்துகிறது. பூடானில் சுற்றுலா வளர்ச்சிக்கு நல்லவளம் உள்ளது. இதன் மேம்பாட்டுக்கு அதிக முதலீடும் தேவையில்லை. எனினும் இதன் மூலம் நல்ல லாபத்தை பெறமுடியும். ஏழைகள்கூட இதனால் பயன் பெறுவார்கள் என்று மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...