வலுவான, வளமான இந்தியாவால்தான் அண்டை நாடுகளுக்கு உதவமுடியும்

 வலுவான, வளமான இந்தியாவால்தான் அண்டை நாடுகளுக்கு உதவமுடியும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் பூடான் சென்றார். பிரதமர் பதவியேற்ற பிறகு அவரது முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

முதல்நாளில் தலைநகர் திம்புவில் மன்னர் ஜிக்மே வாங்சுக் மற்றும் பிரதமர் ஷெரிங் தோப்கய் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இந்திய உதவியுடன் கட்டப்பட்ட பூடான் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கட்டிடத்தையும் அவர் திறந்துவைத்தார்.

சுற்றுப்பயணத்தின் 2ம் நாளான நேற்று நரேந்திரமோடி பூடான் நாட்டின் பாராளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்தியா எப்போதுமே அண்டை நாடுகளுடன் நட்புறவு வைத்துக் கொள்வதையே விரும்புகிறது. இந்தியா வளமான நாடாக இருந்தால்தான் இந்த பிராந்தியம், குறிப்பாக தெற்காசியகூட்டமைப்பு நாடுகள் முன்னேற முடியும். மேலும், இந்தியா வளமாகவும், வலிமையாகவும் திகழ்ந்தால்மட்டுமே அருகில் உள்ள சிறிய பக்கத்து நாடுகளின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.

அண்டை நாடுகளின் வளர்ச்சியில் இந்தியாவுக்கும் பொறுப்புள்ளது என்பதை இந்தியா உணர்ந்து இருக்கிறது. அதனால் தான் எனது பதவி ஏற்பு விழாவின்போது தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் ஆட்சிமாற்றத்தால் இந்தியா–பூடான் இடையே நிலவும் வலிமையான நட்புறவில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. அதுதொடரும்.

பூடானும், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களும் கூட்டாக விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பான புதியபரிந்துரைகள் மற்றும் இமயமலையில் ஒருங்கிணைந்த பல்கலைக் கழகத்தை ஆராய்ச்சிக்காக நிறுவுவது ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு மேலும்விரிவடையும்.

ஒருநாட்டை தீவிரவாதம் பிளவுபடுத்துகிறது. அதேநேரம் சுற்றுலா ஒற்றுமை படுத்துகிறது. பூடானில் சுற்றுலா வளர்ச்சிக்கு நல்லவளம் உள்ளது. இதன் மேம்பாட்டுக்கு அதிக முதலீடும் தேவையில்லை. எனினும் இதன் மூலம் நல்ல லாபத்தை பெறமுடியும். ஏழைகள்கூட இதனால் பயன் பெறுவார்கள் என்று மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...