பாஜக.,வை எதிர்க்க, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது என்ற பேச்சுக்கே இடம் இ்ல்லை' என்று இடதுசாரிகள் தெரிவித்துள்ளன.
கோல்கட்டாவில், சமீபத்தில் தொலைக் காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த, மம்தாபானர்ஜி கூறியதாவது: பீகாரில், சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலுவும், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரும், காங்கிரஸ் கட்சியும் அணிசேர்ந்து உள்ளன. பா.ஜ.,வுக்கு எதிராக அமைக்கப்பட்ட இந்தகூட்டணி, இடைத் தேர்தலில் வெற்றியும் பெற்றுள்ளது. அதேபோல், மேற்கு வங்கத்தில், பா.ஜ., பலம்பெறும் சூழ்நிலை உருவானால், எங்கள் கட்சியின் நீண்டநாள் எதிரிகளான, இடதுசாரிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் பரிசீலிப்போம் இவ்வாறு, மம்தா பானர்ஜி கூறினார்.
இதற்குப் பதில் அளிக்கும்வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா கூறுகையில், ''திரிணமுல் காங்கிரஸ்சுடன், கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. மம்தாவின் கொள்கைகள் மற்றும் அரசியலால்தான், மேற்குவங்கத்தில், பாஜக., கால் பதிக்கத் துவங்கியுள்ளது. பா.ஜ.க,வை, நாங்களே தனியாகவே எதிர்ப்போம்,'' என்றார்.
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.