தூதரக ஊழியர்களின் குடும்பத்தினருடன் ஜாலியாக பேசிய மோடி களை

 அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் ஊழியர்களை சந்தித்துப்பேசிய பிரதமர் மோடி, அவர்களது குழந்தைகளுடன் உற்சாகமாக புகைப் படங்களும் எடுத்துக் கொண்டார். அமெரிக்க பயணத்தில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி தொடர்ந்து பல்வேறு விருந்தோம்பல்கள், சந்திப்புகளில் பிசியாக இருக்கிறார்.

துணை ஜனாதிபதி ஜோபிடன் கொடுத்த மதிய உணவு விருந்தில் கலந்துகொண்ட அவர், அதேபோல வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கொடுத்த விருந்திலும் கலந்துகொண்டார்.

மேலும் வாஷிங்டனில், இந்திய அமெரிக்க சமூகத் தினரையும் அவர் சந்தித்து உரையாடினார். இந்திய தூதரகத்திற்கு வெளியே கூடியிருந்த இந்தியர்களை பார்த்து அவர் கையசைத்தார். இந்திய தூதரகத்திற்குள் அவர் தூதரக அதிகாரிகளுடன் தனித்தனியாக பேசினார். கை குலுக்கினார். போட்டோவுக்கும் போஸ் கொடுத்தார். தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரையும் அவர் சந்தித்தார். இந்தநிகழ்ச்சியில் தூதர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். மேலும் பல தூதரக ஊழியர்களின் பிள்ளைகள், பள்ளிக் கூடத்தைக் கட் அடித்துவிட்டு மோடியைப் பார்க்க வந்திருந்தனர். அவர்களுடனும் ஜாலியாக பேசினாராம் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...