ஆடாது அசங்காது வா-கண்ணா-
ஆடாது அசங்காது வா-கண்ணா-
உன் ஆடலில் ஈரேழு’ புவனமும்-
அசைந்து அசைந்தாடுதே’ – எனவே-
ஆடாது அசங்காது’ வா- கண்ணா-
ஆடலைக்- காணத் தில்லை அம்பலத்து- இறைவனும் தன்-
ஆடலை- விட்டு இங்கே- கோகுலம் வந்தான் (2)-
ஆதலினால் சிறு- யாதவனே – ஒரு-
மாமயில் இறகுஅணி- மாதவனே நீ ( )-
சின்னஞ்சிறு பதங்கள்- சிலம்பொலித் திடுமே – அதைச்-
செவிமடுத்த பிறவி- மனங்களித் திடுமே-
பின்னிய சடை சற்றே வகை கலைந் திடுமே – மயில்-
பீலி அசைந்தசைந்து நிலைகலைந் திடுமே-
பன்னிரு கைஇறைவன் ஏறுமயில் ஒன்று–
தன் பசுந்தோகை விரித்தாடி* பரிசளித்திடுமே-
பாடி வரும் அழகா..உனைக் காணவரும்-
அடியார் எவராயினும்-
கனக மணிஅசையும்* உனது திருநடனம்-
கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே-
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.