31-ந் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம்

 பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நேற்று டெல்லியில், தமிழக பாஜ பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் பிரதாப் ரூடியை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதன்பிறகு தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றுக்கட்சி பாரதீய ஜனதாதான் என்று நாங்கள் சொல்லி வருகிறோம். தமிழகத்தில் எங்கள் கட்சியை பலப்படுத்த, பொறுப்பா ளராக நியமிக்கப்பட்டு இருக்கும் ராஜீவ்பிரதாப் ரூடியின் வழிகாட்டுதல் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கைஉள்ளது.

தமிழகத்தில் பாஜக.,வுக்கு தற்போது 10 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கட்சிக்கு 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.

தமிழக அரசு ஆவின்பால் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி இருக்கிறது. இதை எதிர்த்துவருகிற 31-ந் தேதி சென்னையில் பாஜ போராட்டம் நடத்த இருக்கிறது. அதைத்தொடர்ந்து நவம்பர் முதல்வாரத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறும். பால்விலை உயர்வை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். ஆவின் நிறுவனம் வணிகநோக்கில் செயல்படக் கூடாது. சேவை நோக்கில் செயல்படவேண்டும்.

கூட்டணியில் இருப்பவர்கள் கருத்துகூற சுதந்திரம் இருக்கிறது. அதனை தெளிவுபடுத்தும் கடமை எங்களுக்கு இருக்கிறது. சிலகருத்துகளை கூறுவதனால் கூட்டணி உடைந்துவிட்டது என்று கூறமுடியாது. டெல்லியில் பிரதமரின் விருந்துக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப் படாததால் எங்களுக்குள் ஏதோ விரிசல் வந்து விட்டது என்பது போல சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். அது தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் என்பதை தெளிவுபடுத்துகிறோம்.

ரஜினி காந்தை நாங்கள் வலியப்போய் அழைக்கவில்லை. தேசிய எண்ணம் கொண்ட திரைப்பட கலைஞரான அவர் வந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் எங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டோம்.

ரஜினிகாந்த் மட்டுமல்ல. தேசிய எண்ணம்கொண்ட மற்ற நடிகர்கள், கலைஞர்கள், மருத்துவர்கள் என்று எந்தத் துறையில் இருந்தாலும் அவர்கள் எங்களுடன் இணையவேண்டும் என்று விரும்புகிறோம். நரேந்திர மோடியின் தலைமை, எங்கள் கொள்கை, எங்கள் தொண்டர்களின் அர்ப் பணிப்பு ஆகியவற்றை நம்பித் தான் எங்கள் கட்சி உள்ளது .

தமிழகத்தில் பாரதீய ஜனதா மிகப்பெரும் சக்தியாகமாறி அடித்தட்டு மக்களின் ஆதரவுடன் 2016-ல் பெரிய வெற்றியை பெற்று ஆட்சியைபிடிக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...