பா.ஜ.க-வில் தினமும் 25 ஆயிரம் பேர் இணைகின்றனர்.

 தமிழகத்தில் பாஜக-வில் தினமும் 25 ஆயிரம் பேர் இணைவதாகவும், வரும் 1-ம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கையை மேலும் அதிகப்படுத்தப் போவதாகவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

பத்திரிகயாளர்களை தமிழிசை சந்தித்து பேசுகையில், "மத்தியில் ஆளும் பாஜக அரசு கவர்ச்சி அரசியலை நடத்தாமல் கொள்கைபிடிப்போடு அரசியல் நடத்தும் காரணத்தினால் தமிழகத்தில் இருந்து நிறையபேர் எங்கள் கட்சியில் இணைகின்றனர். மதம் சார்ந்த பிரச்சினைகள் மட்டும் அல்லாமல், மனிதம் சார்ந்த பிரச்சினைகளை நாங்கள் முன்னெடுத்து செல்லும் காரணத்தினால் பா.ஜ.க-வில் தமிழகத்தில் இருந்து சராசரியாக தினமும் 25 ஆயிரம் பேர் உறுப்பினராக இணைகிறார்கள். மேலும் வரும் 1-ஆம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தி எண்ணிக்கையை அதிகப்படுத்த உள்ளோம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திரு. ஈ.வி.எஸ் அவர்கள் தமிழகத்தில் பாஜக. எங்கே இருக்கிறது என்று கேட்கிறார். கண்ணாடி அணிந் திருந்தும் அவருக்கு பாஜக. வளர்ந்து கொண்டிருப்பது தெரிய வில்லை போல இருக்கிறது அவரது பேச்சு. காம ராஜரை மறந்து குஷ்புவை மட்டும் வைத்து கட்சியை நடத்தும் நிலையில் தமிழக காங்கிரஸ்கட்சி உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிதான் துண்டுதுண்டாக உடைந்துள்ளது. முதலில் அவர் கட்சியைப் பாதுகாத்துக்கொண்டு பலப்படுத்தி கொள்ளட்டும்.

போக்கு வரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு பிரச்சினையை சுமூகமாக தீர்க்கவேண்டும். மழைகாலம் தொடங்கி விட்டதால் சென்னையில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. எனவே, சாலையை செப்பனிடும் பணியில் மாநகராட்சி ஈடுபடவேண்டும்" என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...