யாரோ எழுதிய வசனத்தை சினிமாவில் பேசலாம்! அரசியலில் பேசக்கூடாது !!

 தாம்பரத்தை தாண்டி தாமரையை தெரியாது குஷ்பூ பேசியிருப்பதன் மூலம் அவருக்கு தாம்பரத்தை தாண்டி எதுவுமே தெரியாது. இவ்வளவு கிட்டப் பார்வை உள்ளவர் என்பது இப்போது தான் தெரிகிறது.

தாம்பரத்தை தாண்டியும் தாமரை வளர்ந்து இருக்கிறதா? எல்லைகளை கடந்தும்வளர்ந்து வருகிறதா? என்ற அரசியல் நிலவரங்களை அறிந்துக் கொண்டு பேசுவது தான் அவர் பெற்றுள்ள பதவிக்கு மரியாதை.கன்னியா குமரியில் இருந்து காஷ்மீர் வரை தாமரை மலர்ந்துள்ளது. கன்னியாகுமரியில் ஒரு அமைச்சர் இருக்கிறார். நாகர்கோவில் நகர சபை எங்கள் கைவசம் உள்ளது.

மேட்டுப்பாளையம் எங்கள்வசம் உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தாமரை… என்று வட இந்தியர்கள் பெருமையுடன் சொல்லுமளவுக்கு எல்லா இடங்களிலும் கால்பதித்து இருக்கிறோம்.கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் திமுகவுக்கு இணையான வாக்குகளை பெற்றுள்ளோம். திமுக, அ.திமுகவுக்கு மாற்றாக பிஜேபி வளர்ந்து இருப்பதை, வளர்ந்து வருவதை மக்கள் கண் கூடாக பார்க்கிறார்கள். அந்த வயிற்றெரிச்சலில்தான் இப்படி பேசியிருப்பர் என்று கருதுகிறேன்.

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் போட்டியிடும் திராணி இல்லை. போட்டிபோடாமல் பயந்து ஓடியவர்கள் அடுத்தவர்களை விமர்சிப்பதில் அர்த்தம் இல்லை.ஸ்ரீரங்கத்தில் நடந்தவிசயம் நாடறிந்தது. நாங்கள் அந்ததொகுதி நிர்வாகிகளை மட்டுமே வைத்து தேர்தலைசந்தித்து ஊழலுக்கு எதிராக 5 ஆயிரம் வாக்குகளை திரட்டியதை பெருமையாக கருதுகிறோம்.

இவை எதுவுமே தெரியாமல் நன்றி உணர்ச்சியை காட்டுவதற்கு வாய்க்குவந்த வார்த்தை யெல்லாம் பேசக்கூடாது. யாரோ எழுதி கொடுத்த வசனத்தை சினிமாவில் பேசலாம். இது அரசியல். இங்கும் எழுதி கொடுத்த வசனத்தைபேசினால் எடுபடாது. மக்கள் எள்ளி நகையாடுவார்கள்.

எங்களை பற்றி விமர்சிக்கும் குஷ்புவால் திமுக.,வை விமர்சிக்க முடியாது. காரணம் இன்னும் பாசம் இழையோடுகிறது. பிஜேபி விமர்சிப்பதற்கு முன்பு உங்கள்பலம் என்ன? எத்தனை லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்? எத்தனை மாவட்ட தலைவர்கள் எந்தெந்த அணியில் இருக்கிறார்கள்? வாசன் போய்விட்டார். சிதம்பரம் இருப்பாரா? போவாரா? என்று தெரியவில்லை. இந்தகோஷ்டி அரசியலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

அதை சரிப்படுத்த முடியுமா என்று யோசியுங்கள். ஒரு இடைத் தேர்தல் வந்தால் தைரியமாக போட்டியிட முடியுமா? இல்லை பொதுத் தேர்தலில்தான் தைரியமாக வேட்பாளர் லிஸ்ட் தயாரிக்க முடியுமா? என்ற காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரங்களை எல்லாம் கவனியுங்கள்.சினிமா பிரபலமாக இருப்பதால் எதை வேண்டு மானாலும் எப்படியும் பேசலாம் என்று நினைத்துவிடாதீர்கள்.

நன்றி ; டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
பா.ஜ.க. மாநில தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...