பருப்பு பதுக்கல்காரர்கள் மீது மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வில்லை

 துவரம்பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் விலை அதிகரித்துவரும் சூழலில் கடந்த 2 நாட்களில் மட்டும் 36 ஆயிரம்டன் பருப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

துவரம் பருப்புவிலை கிலோ 210-ஐ கடந்து விற்கப்படும் நிலையில் பதுக்கலுக்கு எதிராக மத்தியஅரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி கடந்த 2 நாட்களில் 10 மாநிலங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 36 ஆயிரம்டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதிக பட்சமாக மகாராஷ்ட்ராவில் 23 ஆயிரத்து 340 டன்னும், சத்தீஷ்கரில் 4 ஆயிரத்து 525 டன் பருப்பு பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து 4 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

”பருப்புவகைகளை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வில்லை. கடந்த இரு தினங்களில் மட்டும் 3,290 திடீர்சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. திடீர் சோதனைகள் தொடரும் அதே சமயம் பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...