வாக்குகளுக்காக பசுவை அன்று ‘சின்னமாகவும் இன்று சின்னா பின்னமாகவும் போற்றும் காங்கிரஸ்

 அன்று வாக்குகளுக்காக பசுவை 'சின்னமாக்கிய' காங்கிரஸ், இன்று அதே வாக்குகளுக்காக பசுவை 'சின்னா பின்னமாக்குவது' காங்கிரஸ் கட்சியின் பதவி வெறியை காட்டுகிறது. பசு வதை தடை சட்டத்தை எதிர்க்கிறது எதிர் கட்சிகள்.

குறிப்பாக காங்கிரஸ் அதை எதிர்த்து, இரு மதங்களுக்கிடையே, பல்வேறு சமூகங்களுக்கிடையே அரசியல் செய்ய முயற்சிப்பது அந்த கட்சியின் மோசமான, கேவலமான நிலைப்பாட்டையே குறிக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, ஜவஹர் லால் நேரு அவர்களின் தலைமையில் இயங்கிய காங்கிரஸ் கட்சி 'இணை காளைகள்' தங்களின் கட்சியின் சின்னமாக கொண்டிருந்து, விவசாயிகளின் காவலனாக முன்னிறுத்தி வாக்குகளை கேட்டது. 1969 ம் ஆண்டு உட்கட்சி பூசல் காரணமாக காங்கிரஸ் பிளவு பட்டபிறகு,

அதாவது காமராஜர் தலைமையில் CONGRESS (O) ஒரு கட்சியாகவும், இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் (R) என்று ஒரு கட்சியாகவும் பிளவுபட்ட பின், ஏற்கனவே இருந்த 'இணை காளைகள்' சின்னம் முடக்கப்பட்டது. சின்னம் பறிபோனதால் பதறிப்போன இந்திரா காந்தி அவர்கள் செய்வதறியாது திகைத்தார்.

எப்படியாவது மக்களின் நம்பிக்கை பெற்ற சின்னத்தை பெற வேண்டுமென்ற எண்ணத்தில் திட்டமிட்டு 'பசுவும் கன்றும்' சின்னத்தை தேர்ந்தெடுத்தார். அப்படி மக்களின் வாக்கை கவர்வதற்காக,மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக புனிதமான பசுவை தங்களின் சின்னமாக்கி கொண்ட காங்கிரஸ், இப்போது, பசுவதை தடை சட்டத்தை எதிர்ப்பதோடு, மாட்டிறைச்சி குறித்து பல தவறான தகவல்களை மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கி வருகிறது.

இது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் இன்றைய தலைவர்களும், பேச்சாளர்களும் பசு குறித்து பேசும் பேச்சுக்கள் ஹிந்துக்களின் நம்பிக்கைகளை புன்படுத்துவதோடு, சிறுபான்மை சமுதாயத்தினரை ஹிந்துக்களுக்கு எதிராக தூண்டி விடும் முயற்சியில் இறங்கியிருப்பது இந்த நாட்டிற்கு காங்கிரஸ் செய்யும் மிக பெரிய துரோகம்.

அன்று வாக்குகளுக்காக பசுவை 'சின்னமாக்கிய' காங்கிரஸ், இன்று அதே வாக்குகளுக்காக பசுவை 'சின்னாபின்னமாக்குவது' காங்கிரஸ் கட்சியின் பதவி வெறியை காட்டுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...