கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

 மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது உண்டு. துவையல் செய்தும் உண்ணலாம். இருதயத்துக்கு நல்லது. தலையையும், மூளையையும் பற்றிய சூட்டை மாற்றும். ஜீரணம் உண்டாகும். குளிர்ந்த தேகத்தோருக்கு உதவாது. பித்தம் போக்கியாகவும், உடல் பலம், தாது பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

கொத்துமல்லிக் கீரையுடன் சம அளவு துவரம் பருப்பைச் சேர்த்து பக்குவப்படுத்தி 40 நாட்கள் சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவடையும்.

கொத்துமல்லி இலை, சரக்கொன்றை இலை, புளி இவற்றை ஒன்றுகூட்டி தண்ணீர்விட்டுக் காய்ச்சி வாய் கொப்பளிக்க தொண்டை வீக்கம் குணமாகும்.

கொத்துமல்லிக் கீரையை ஆய்ந்து அத்துடன் தேவையான அளவு பச்சை மிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்துத் துவையல் அரைத்து அதைக் கடுகு, உளுத்தம் பருப்பு, சேர்த்து நல்லெண்ணெயில் தாளித்து தினசரி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர பித்தம் தணியும்.

தேகத்தில் எங்காவது சுரசுரப்பு காணப்பட்டால் கொத்துமல்லிச்சாற்றை அந்தப் பகுதியில் காலையில் பூசி மாலையில் கழுவி விட வேண்டும். இவ்விதம் 7 நாட்கள் செய்துவர சுரசுரப்பு மாறி தோல் வழுவழுப்பாகும்.

நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...