ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை விட்டு, ஓர் சுத்தமான நந்தியாவட்டைப் பூவை அதில் போட்டு 24 மணி நேரம் ஊறவைத்து, சுத்தமான கையினால் பூவை எடுத்து அதிலுள்ள நீரை ஒவ்வொரு கண்ணிலும் ஒரு துளி வீதம் விட்டு வந்தால் கண் நோய் குணமாகும்.
காலை, மாலை கண்களைச் சுத்தம் செய்த பின் இந்த நீரை விட வேண்டும். கண்நோய் சீக்கிரமே குனமாவதோடு, கண் சம்பந்தமான சகல கோளாறுகளும் குணமாகும்.
நந்தியாவட்டையின் வேரைக் கொண்டு வந்து அதைக் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வெய்யிலில் காய வைத்து, உரலில் போட்டு இடித்து மாச்சல்லடையில் சலித்து, தூள் இருக்கும் அளவில் நான்கில் ஒரு பங்கு உப்புத் தூள் சேர்த்துக் கலக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை பல் துலக்கி வந்தால், பல் சம்பந்தமான சகல கோளாறுகளும் குணமாகும்.
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
Leave a Reply
You must be logged in to post a comment.