சூரியனின் புதிரை ஆராயும் இந்திய விஞ்ஞானி

திவ்யேந்து நந்தி என்ற பெயருக்கு, 'நிலவைப் போல் தெய்வீகமானது' என்று பொருள். ஆனால், இந்த இந்திய விஞ்ஞானியின் ஆர்வமெல்லாம் சூரியன் மீதுதான்.

37 வயதாகும் திவ்யேந்து, சூரியனைப் பற்றிய மிக முக்கியமான ஆய்வை மேற்கொண்டு வருகிறார். சூரியனின் அண்மைக் கால புதிரான மாற்றங்களுக்கு விடை காண்பதே திவ்யேந்துவின்

பிரதான நோக்கமாக இருக்கிறது. குறிப்பாக, 'சன்ஸ்பாட்' எனப்படும் 'சூரியப் புள்ளிகளின்' மறைவு குறித்து.

கொல்கத்தாவைச் சேர்ந்த சூரிய இயற்பியலாளரான திவ்யேந்து, பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்ïட் ஆப் சயன்ஸில் பயின்றவர். பின்னர், அமெரிக்காவில் மொன்டானா, ஹார்வர்டு போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்ட திவ்யேந்து, 8 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். சூரியன் தொடர்பான தனது ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்.

கடந்த 2008- 2009-க்கு இடையில், சூரியனில் சூரியப் புள்ளிகள் காணாமல் போனது ஏன் என்பதே திவ்யேந்துவின் ஆய்வின் மையமாக இருக்கிறது. தொலைநோக்கிகள், பிற உபகரணங்கள் மூலம் சூரியனை ஆராய்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகளுக்கு, ஏன் இவ்வாறு சூரியப் புள்ளிகள் காணாமல் போயின என்பது புரியாத புதிராக இருக்கிறது. சூரியப் புள்ளிகள் குறித்து விஞ்ஞானிகள் அதிக அக்கறை கொள்வதற்குக் காரணம் இருக்கிறது. பூமிவாழ் உயிரினங்கள் மீதும், விண்வெளி காலநிலை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை இவை.

சக்திவாய்ந்த காந்தப்புலங்களான சூரியப்புள்ளிகள், அவ்வப்போது தோன்றுவதும், மறைவதும், அவற்றின் எண்ணிக்கையும், அடர்த்தியும் கூடுவதும், குறைவதும் இயல்புதான். ஆனால், இவ்வளவு நீண்ட காலத்துக்குக் காணாமல் போனதில்லை. ஒரு நூற்றாண்டுக்கு மேலாக நிகழாத அதிசயம் இது. அதனால்தான் விண்வெளி ஆராய்ச்சியாளர்களும், காலநிலை ஆய்வாளர்களும் வியப்பும், கவலையும் அடைந்திருக்கின்றனர்.

சூரியப் புள்ளிகள் மறைவால் சூரி யனின் சக்தி சற்றுக் குறைந்து, சூரிய ஒளி சிறிது குறைந்திருப்பதைப் போலத் தோன்றுகிறது.

சூரியனின் இந்த மாற்றம் பூமி மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றபோதும், பூமியின் வளிமண்டலப் படலத்தைச் சுருங்கச் செய்திருக்கிறது. எரிகற்கள் போன்ற விண்வெளிக் கழிவுகளைத் தடுத்து நிறுத்தும் வடிகட்டியாக வளிமண்டலப் படலம் உள்ளது. கழிவுகள் இந்தப் படலத்தை எட்டியதுமே எரிந்து அழிந்துவிடுகின்றன. ஒருமாதிரியான சுயசுத்திகரிப்பு அமைப்பு இது.

ஆனால், இëëந்தப் படலம் சுருங்கும்போது, விண்வெளிக் கழிவுகளை ஈர்த்து எரிக்கும் இதன் ஆற்றலும் குறைகிறது. ஆக, விண்வெளிக் கழிவுகள், விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் நமது செயற்கைக்கோள்களுடன் மோதும் அபாயம் அதிகரிக் கிறது. தவிர, விண்வெளியில் இருந்து மேலும் அதிகமான மின்காந்த நுண்ணலைகள் பூமிப் பரப்பை அடையும். அது, பூமியின் பருவநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இந்த விஷயம் குறித்து ஆராய்வதற்கு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவி தனக்குச் சரியான நேரத்தில் கிடைத்திருப்பதாகக் கூறுகிறார் திவ்யேந்து நந்தி. திவ்யேந்துவுடன், அவருடைய முன்னாள் பி.எச்டி., மாணவரான ஆண்ட்ரஸ் முனோஸ்-ஜராமில்லோவும், மொன்டானா பல்கலைக்கழகத்தின் பீட்ரஸ் மார்டன்ஸும் ஆய்வில் இணைந்துள்ளனர்.

சூரியப் புள்ளிகள் ஏற்படுத்தக்கூடிய சூரியசக்திப் புயல்கள் விண்வெளியில் சுற்றிவரும் செயற்கைக்கோள்களிலும், தொலைத்தொடர்பிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. எனவே இந்திய- அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரு முக்கியமான ஆய்வில் நம்மவரும் இடம்பெற்றுள்ளது நமக்குப் பெருமைதானே!

One response to “சூரியனின் புதிரை ஆராயும் இந்திய விஞ்ஞானி”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்ச ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி -பிரதமர் மோடி சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுப் பொருட்கள் ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கனடா, பிரான்ஸ், ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...