கோ கோ முதல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கோ கோ முதல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மகளிருக்கான கோ கோ உலகக்கோப்பை போட்டி முதல்முறையாக நடத்தப்பட்டது. டில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. குரூப் ஸ்டேஜ் ஆட்டங்களில் தென்கொரியா, ஈரான் மற்றும் மலேசியா அணிகளை தோற்கடித்த இந்திய அணி காலிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தியது. அதன்பிறகு, தென்னாப்ரிக்காவை அரையிறுதியில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆரம்ப முதலே இந்திய வீராங்கனைகள் ஆட்டத்தில் அனல் பறக்க விட்டனர். இதனால், இந்திய அணிக்கு புள்ளிகளுக்கு புள்ளிகள் கிடைத்தது. இறுதியில், 78-40 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று, முதல்முறையாக மகுடத்தை சூடியது.

சாம்பியன் பட்டத்தை வென்ற மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில், ‘அசாத்திய திறமை, உறுதி மற்றும் குழுவாக செயல்பட்டு இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள். இந்தியாவின் பழமையான பாரம்பரிய விளையாட்டை, இந்த வெற்றி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.நாட்டில் உள்ள கணக்கிட முடியாத இளம் விளையாட்டு வீரர்களுக்கு இது உந்துதலாக இருக்கும்’, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, ஆண்களுக்கான முதல் கோ கோ உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணி, நேபாளத்தை 54-36 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...