மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் சாறு. பசியைத் தூண்டும். ரத்தச் சோகையை குணமாக்கும். இருமலுக்கு இந்தச் சாறு நிவாரணமளிக்கும், வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் போக்கு கோளாறுகளின் போது மாதுளையை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
மாதுளை புத்திக்கூர்மையை அதிகப்படுத்துகிறது. உடலுக்கு வலுவும், பசியெடுக்க வைக்கும் குணமும் மாதுளைக்கு அதிகமாக உள்ளது. பித்தம், கபம், வாயுவை அறவே குணமாக்கும் அருங்கனி. மாதுளை தாகத்தை அடக்க, எரிச்சல் நீங்க, காய்ச்சல் குணமாக, வாய் நோய்கள், தொண்டைக் கோளாறுகள் நீங்க உதவும்.
உடலில் ரத்தத்தை ஊற வைக்கவும், வலுவுக்கும் பயனாகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக வயிற்றுக் கடுப்புக்கு நல்ல மருந்து.எளிதில் செரிமானமாகும். காய்ச்சலின்போது அருந்த ஏற்றது.
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.